அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில், கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில், கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 97879- 06582, 04182- 245 304, 293 256 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பேசும் பெருமாள்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

கூழம்பந்தல்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

இந்தப் பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் இவர், இந்த ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு மருந்தும் செய்து கொடுத்துள்ளார். இறந்த குழந்தையை தகனம் செய்தவுடன், அவர்களுக்கு தெளிக்கும் பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துள்ளார். கோபமடைந்த பெருமாள், பட்டனை அழித்ததுடன், ஊரையும் அழித்து விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிறந்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில், குன்றத்தூர்

அருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2478 0436, 98401 58781 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருஊரகப்பெருமாள்

தாயார்

திருவிருந்தவல்லி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குன்றத்தூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் குலோத்துங்க சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். ஒருசமயம் அவனுக்கு தோஷம் உண்டானது. பல தலங்களில் பரிகாரம் செய்தும் பலனில்லை. ஒருநாள் திருமால் அவனது கனவில் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருஊரகப்பெருமாளாக அருளுவதாகவும், தன்னை அவ்விடத்தில் வந்து வழிபட தோஷ நிவர்த்தி பெறும் என்றும் கூறினார். அதன்படி மன்னன் காஞ்சிபுரம் சென்று, திருஊரகம் அடைந்தான். அங்கு, பெருமாள் ஆதிசேஷன் வடிவில் இருந்ததைக் கண்டான். அதுவரையில் பெருமாளை, முழு உருவத்துடன் பார்த்திருந்த மன்னனுக்கு தான் சரியான கோயிலுக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே அன்றிரவில் அங்கேயே தங்கினான். அன்றும் அவனது கனவில் தோன்றிய பெருமாள், தானே அத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியிருப்பதாக உணர்த்தினார். அதன்பின் ஊரகப் பெருமாளை தரிசித்த மன்னன், தோஷம் நீங்கப்பெற்றான். பின்பு பெருமாளுக்கு நன்றிக்கடனாக இத்தலத்தில் ஒரு கோயில் கட்டினான். அப்போது பெருமாள் அவனுக்கு, திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் காட்சி கொடுத்தார். எனவே அதே அமைப்பிலேயே இங்கு பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு,”திருஊரகப்பெருமாள்என்று பெயர் சூட்டினான்.