அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம்

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம், தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 4364- 282 853, 94874 43351

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

காத்ர சுந்தரேஸ்வரர்

தாயார்

துங்கபாலஸ்தானம்பிகை

பழமை

2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

காஞ்சன நகரம்

ஊர்

கஞ்சாநகரம்

மாவட்டம்

நாகப்பட்டினம்

மாநிலம்

தமிழ்நாடு

பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களைக் காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்றக் காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவிதஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.

அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை

அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை, மதுரை மாவட்டம்.

+91 452 2681079, 95850 46910 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ராதா கிருஷ்ணர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திருப்பாலை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

ராதை கண்ணன் மீது கொண்ட காதலுக்கு அடையாளமாக பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை. ஒருசமயம் தன் கோபாலனைப் பற்றிய செய்தி ஒன்றுமே யசோதைக்கு தெரியாமல் போயிற்று. “கோபாலன் எங்கே போய் விட்டான். அவனை நீண்ட நாட்களாகக் காணவில்லையே அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே. அவன் பசி தாங்க மாட்டானே. இப்போது பெரியவன் ஆகி விட்டான். வெண்ணெய் திருட இப்போது போவதில்லையேஎன வருந்திக் கொண்டிருந்தவளுக்கு ராதையின் நினைவு வந்தது. “ராதாவிடம் கேட்டால் தெரிந்து விடும். இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயக்கண்ணன் எங்கும் போக மாட்டான். ராதையும் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள். கண்ணன் இல்லா விட்டால் ராதை இல்லைஎனக் கருதியவள் ராதையின் வீட்டிற்குச் சென்றாள்.

ராதா. கண்ணனைப் பற்றிய சேதி எதாவது உனக்கு தெரியுமா? அவனைக் காணவில்லை. எங்கே போனான்? உன்னிடம் சொன்னானா?” பதைபதைப்புடன் கேட்டாள் யசோதா. அப்போது ராதை தெய்வீகப்பரவச நிலையில் ஆழ்ந்திருந்தாள். யசோதை கேட்டது அவள் காதில் விழவில்லை. யசோதை அவள் கண் விழிக்கட்டும் எனக் காத்திருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு ராதைக்கு மெல்ல மெல்ல தெய்வீகப் பரவச நிலை கலைந்து உலக நினைவு திரும்பியது. தன் முன்னால் அமர்த்திருந்த யசோதையைக் கண்டதும் அவள் முன் விழுந்து வணங்கினாள். பிறகு தன்னைத்தேடி வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். யசோதை கண்ணனைக் காணவில்லை, அவன் எங்கே?” என பரபரப்பாகக் கேட்டாள். ராதா இதைக் கேட்டு எந்த பரபரப்பையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.