அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை

அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை, தேனி மாவட்டம்.

+91-4554- 252891 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 11 முதல் 1 மணிவரை நடை திறந்திருக்கும்.

மூலவர்

திருமலைராயர் (அரங்கநாதர்)

உற்சவர்

ஸ்ரீரெங்கநாதர்

தாயார்

ஸ்ரீதேவி,பூதேவி

தீர்த்தம்

அருவி நீர்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

முடக்கு

ஊர்

கோம்பை

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் கோம்பை நகர் மேற்கு பகுதி தொடக்கத்தில் ஏராளமான பசுமாட்டுத்தொழுவங்கள் இருந்தன. இங்கிருந்து கறந்த பாலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு தினமும் ஒரு பால்காரர் கொண்டு போய்க் கொடுப்பார். அவர் பால் கொண்டு செல்லும் போதெல்லாம் ஓரிடத்தில் தினமும் கால் இடறி பால் கொட்டி வீணாகியது. ஒரு நாள் அவர் பாலுடன் கோடரியையும் எடுத்துச் சென்று கால் தட்டிய இடத்திலிருந்த மரத்தின் வேரை வெட்டினார். அதிலிருந்து வந்த இரத்தத்தை பார்த்த பால்காரர் பயந்து போய் வீட்டிற்கு திரும்பினார். அன்று இரவிலேயே ஊர் ஜமீன்தார் கனவில் தோன்றிய திருமலைராயப் பெருமாள், அன்றைய தினம் பால்காரர் மூலம் இராமக்கல் மலையில் சோதனையாக நடந்த நிகழ்ச்சியையும், அவ்விடத்தில் தான் சுயம்புவாக எழுந்தருளியதைப் பற்றியும் கூறி கோயில் எழுப்பும்படி அருளினார். பால்காரர் மூலம் நடந்த சம்பவத்தையும், ஜமீன் கனவில் கோயில் எழுப்பவும் பெருமாள்கூறியதை அறிந்த ஊர் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அதன்பின், மக்கள் அனைவரும் இராமக்கல் மலைக்குச் சென்று பெருமாள் காட்டிய அதே இடத்தில் கோயிலைக் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திருமலைராயப்பெருமாள் சித்து புரிந்த இராமக்கல் மலை, தொலைவில் இருந்து பார்க்கும் போது சாந்த சொரூபமான மனிதனின் முகம் போன்றும், அதில் புடைப்பை கோடரியால் வெட்டிய போது இரத்தம் தெரித்த பகுதி இராமநாமம் இட்டது போலவும் காட்சியளிப்பது, இறைவனின் அற்புதச்செயலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இங்கு உள்ள பெருமாள் வருடந்தோறும் வளர்ந்துகொண்டே வருவதாக கோயில் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாள் ஊரிலிருந்து சுமார் 6 கி,மீ., தூரத்தில் ஊரை நோக்கியபடி அமைந்துள்ளார்.

அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில், கூடலூர்

அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில், கூடலூர், தேனி மாவட்டம்.

+91- 4554 – 230 852 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கூடல் அழகிய பெருமாள்

உற்சவர்

சுந்தர்ராஜர்

தாயார்

மகாலட்சுமி

தல விருட்சம்

புளியமரம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருக்கூடலூர்

ஊர்

கூடலூர்

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

சிவனிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன், தேவர்களை துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் அசுரனின் அழிவு குறித்து ஆலோசிக்க, தேவர்களை அழைத்தார். அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இத்தலத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்பு, அசுரனிடமிருந்து தேவர்களைக் காத்த மகாவிஷ்ணு, அவர்களின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். காலப்போக்கில் இங்கு சுவாமிக்கான வழிபாடுகள் மறைந்துபோனது. பிற்காலத்தில் இப் பகுதியை ஆண்ட, சிற்றரசர் ஒருவர் மதுரை கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தினமும் அவரை தரிசித்துவிட்டு, தனது பணியைத் துவங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அரசருக்கு தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், கூடலழகருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கு கோயில் அமைப்பது? சிலை எப்படி அமைப்பது? என அவருக்குத் தெரியவில்லை. தனக்கு அருளும்படி பெருமாளிடம்வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கூடலழகர், இத்தலத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னர், தான் கண்ட அமைப்பில் தாயார்களுடன் சுவாமிக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினார். சுவாமிக்கு, “கூடல் அழகர்என்றே திருநாமம் சூட்டினார்.

திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் ஆகிய தலங்களில் பெருமாள், அஷ்டாங்க விமானத்துடன் அமைந்த சன்னதியில் காட்சி தருகிறார். இத்தலங்கள் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இதைப்போலவே இக்கோயிலிலும் கூடலழகர், அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். இந்த விமானம் இராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.