அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி, தேனி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கைலாசநாதர்

தாயார்

சிவகாமியம்மன்

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

சுனைநீர்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

கைலாசபட்டி

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான வரலாற்று சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் இத்திருத்தலத்தை பற்றி கைலாசநாதர் கோயில் கண்டேன். அங்கு ஓர் சுனை கண்டேன் என்று பாடியுள்ளார். இம்மலைக்கு தியான மலை என்ற பெயரும் உண்டு. சட்டநாத மாமுனிவர் இம்மலைக்கு வந்து தியானம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. கைலாசநாதர் மலைக்கு திருவாச்சி போன்று மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது சிறப்பு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயிலில் பெரிய தேர் இழுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக மலையில் இரும்பு வடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.

இங்குள்ள வெள்ளை விநாயகர் கோயில், குடைவரைக் கோயிலாக அமையப்பெற்றது. பிள்ளையார்பட்டி விநாயகருக்கு அடுத்தபடியாக குடைவரை விநாயகராக இந்த வெள்ளை விநாயகர் சிறப்பு பெற்றவர். பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்கள் நோய்களை விலக்கி ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் கொண்டது இந்த மலை. அத்துடன் நவகிரகக் குன்றுகளையும் சுற்றி வந்த பலன் கிடைப்பதால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம், தேனி மாவட்டம்.

+91- 4546- 231818, 98423 36548

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள் (வேலங்காட்டுபெருமாள்)

உற்சவர்

வரதராஜர்

தாயார்

பெருந்தேவி

ஆகமம்

வைகானசம்

தீர்த்தம்

வராகநதி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

குழந்தை மாநகர்

ஊர்

பெரியகுளம்

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை வடநாட்டில் மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மக்களின் ஒரு பகுதியினர் பெரியகுளம் பகுதிக்கு வந்து வராகநதியின் கரையில் வீடுகள் அமைத்து தங்கினர். அவர்கள் இனிமேலும் தாங்கள் பஞ்சத்தில் சிரமப்படக்கூடாது எனப் பெருமாளை வேண்டினர். அத்துடன் அங்கிருந்த மக்கள் இணைந்து ஓர் ஆலமரத்தின் பக்கத்தில் பெருமாளின் சிலை மட்டும் வடித்து வழிபட்டனர். அதன்பின்பு மன்னர்கள் காலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவியை பிரதிஷ்டை செய்து, பெரியநாயகிக்கும் தனியே சன்னதியுடன் கோயில் எழுப்பி வழிபட்டு வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

சுவாமிக்கு வடப்புறத்தில் வீர ஆஞ்சநேயர் தெற்கு நோக்கியபடி, கால்கள் கிழக்கே திரும்பியிருக்க நின்ற கோலத்தில், வலக்கையைத் தூக்கியபடி, இடது கையில் பூச்செண்டுடன் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. பாண்டிய மன்னர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலில் தாயார் சன்னதிக்கு முன்பு உள்ள தூணில் விநாயகரின் உருவமும், பிற தூண்களில் ஏனைய சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் தானமாக வழங்கப்படும் நெல்மணி மற்றும் விதைகளை விதைப்பதால் விவசாயம் செழிக்கிறது என முதிர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர். மூலஸ்தானத்தின் எதிரே தீப ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தின் முன்பு பிறந்த குழந்தைகளை வைத்து பழங்களை நைவேத்யமாகப் படைத்து பூஜிக்க குழந்தையின் வாழ்வு சிறக்கும் என நம்பப்படுகிறது. இதனால் இங்கு எப்போதும் அதிகமான குழந்தை பக்தர்களைக் காணமுடிகிறது.