Monthly Archives: February 2012

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி,தேனி மாவட்டம்.

+91- 4546- 253 908 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வேதபுரி
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்குத் தனிக் கோயில் தேனி அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோயிலில் காலை பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம் ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 3720 9615, 93809 57562 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெட்சிணாமூர்த்தி
தலவிருட்சம் ஆலமரம்
ஆகமம் காமிகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோவிந்தவாடி
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் மகாவிஷ்ணு பக்தன் ஒருவனைக் காக்கப் போரிட்டபோது, அவரது சக்கரம் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துதீசி எனும் முனிவர் மீது பட்டு, முனை மழுங்கியது. தனது முதன்மையான ஆயுதமான சக்கரம் பயனில்லாமல் போனதால் மகாவிஷ்ணு ஆயுதம் இன்றி இருந்தார். எனவே, அச்சக்கரம் தனக்கு மீண்டும் கிடைக்க என்ன செய்வதென்று தேவர்களுடன் ஆலோசனை செய்தார். சிவனை வேண்டினால் சக்கரம் கிடைக்கும் என அறிந்து கொண்டார்.

சிவனை வணங்கி அருள்பெற சிவதீட்சைபெற வேண்டும் என்பது நியதி. எனவே அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இத்தலம் வந்தார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவனை எண்ணித் தவம் செய்து வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து சிவதீட்சை செய்து வைத்து உபதேசம் செய்தார். மேலும், இத்தலத்திற்கு அருகில் உள்ள திருமால்பூரில் இலிங்க வடிவத்தில் இருக்கும் தன்னை ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜை செய்து வழிபட்டு வர உரிய காலத்தில் சக்ராயுதம் கிடைக்கப்பெறும் என்றும் கூறினார். அதன்படி மகாவிஷ்ணு, அருகில் உள்ள திருமால்பூர் சென்று சிவனை வணங்கி தவம் செய்து சக்ராயுதம்பெற்றார். மகாவிஷ்ணுவிற்கு குருவாக காட்சி தந்த சிவன், இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தியாகஅருளுகிறார்.