Monthly Archives: February 2012

அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ்

அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ், நாக்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் முருகப்பெருமான், வெங்கடேசப் பெருமாள்
அம்மன் வள்ளி, தெய்வானை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் செமினரி ஹில்ஸ்
மாவட்டம் நாக்பூர்
மாநிலம் மகாராஷ்டிரா

நாக்பூரில் மோதிபாக் ரயில்வே காலனி இருக்கிறது. காலனியின் மைதானத்தில் ஒரு வேல் நடப்பட்டு பூஜை நடந்து வந்தது. அப்பகுதியிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து சிறிய கோயில் ஒன்றை அந்த இடத்தில் உருவாக்கினர். இடப்பிரச்னை காரணமாக அங்கிருந்த கோயில் செமினரி ஹில்ஸ் என்ற மேடான இடத்தில் கட்டப்பட்டது. அந்த பகுதி சேட்கள் ஒன்றிணைந்து இந்த கோயிலை எழுப்பினர். தமிழகத்திலிருந்து வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சிலை, நவக்கிரகங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பின்னர் சேட்களின் கோரிக்கையின் பேரில் கோயிலை இரண்டு தளங்களாக அமைக்க முடிவு செய்தனர். கீழே பாலாஜியும், மேல் தளத்தில் முருகப் பெருமானையும் ஸ்தாபனம் செய்ய முடிவெடுத்தனர்.

அருள்மிகு பாபாஜி திருக்கோயில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு பாபாஜி திருக்கோயில், ரேவு மெயின்ரோடு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 44 – 2464 3630, 99941 97935

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சன்னதிக்கு வெளியே நின்று பாபாஜியைத் தரிசிக்கலாம்.

மூலவர் பாபாஜி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பரங்கிப்பேட்டை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பரங்கிப்பேட்டையில் சுவேதநாதய்யர், ஞானாம்பிகை தம்பதியர் வசித்தனர். சுவேதநாதய்யர் இங்குள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கி.பி.203ம் ஆண்டு, கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு நாகராஜன் என பெயர் சூட்டினர். சிறு வயதிலேயே கல்வி, கேள்விகளில் புலமை பெற்றவராக திகழ்ந்த நாகராஜன், பிற்காலத்தில் பாபாஜிஎன பெயர் பெற்றார். நாகராஜனுக்கு ஏழு வயதானபோது, முருகன் கோயிலில் திருவிழா நடந்தது. விழாவுக்கு வந்த ஒருவர், அவரைக் கடத்திச் சென்று காசியில் விட்டு விட்டார். அங்கு யோக மார்க்கத்தைக் கற்ற பாபாஜி, பொதிகைமலைக்குச் சென்று அகத்தியரைத் தரிசித்தார். அவர், “பக்தனே. உனக்கு யோக மார்க்கத்தை போதிக்கும் குரு கதிர்காமத்தில் (இலங்கை) இருக்கிறார்எனச் சொல்லி அனுப்பி வைத்தார். 12 நாட்களில் கதிர்காமம் சென்ற பாபாஜிக்கு, அங்கிருந்த போகர் சித்தர் பஞ்சாங்க கிரியா முறைகளை உபதேசித்தார். அதன்பின், பாபாஜி இமயமலைக்குச் சென்றார். தற்போதும் இவர் இமயமலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிற்காலத்தில் பாபாஜியின் சீடர் ராமைய்யா, இங்கு பாபாஜிக்கு கோயில் எழுப்பினார்.

பாபாவின் தீவிர பக்தர் ஒருவர், அவரது தரிசனம் கிடைக்க விரும்பி பலமுறை இமயமலைக்குச் சென்றார். அவருக்கு பாபா காட்சி தரவில்லை. சோர்வடைந்த பக்தர், தனக்கு குறிப்பிட்ட நாளில் காட்சி கிடைக்காவிட்டால், தான் மலையிலிருந்து குதித்து உயிரை விடப்போவதாக கூறினார். அப்போதும், பாபாவின் தரிசனம் கிடைக்காமல் போகவே, அவர் இமயமலையில் இருந்து குதித்தார். பாபா அவரது உடலை எடுத்து வரச்செய்து, மீண்டும் உயிர் கொடுத்து, தன் சீடராக ஏற்றுக் கொண்டார். இவரையும், மற்றொரு பிரதான சீடரான அன்னை என்பவரையும் இயந்திரமாகப் பிரதிஷ்டை செய்துள்ளனர். அருகிலேயே பாபாஜி மற்றும் முருகன் யந்திரங்கள் உள்ளன.