Monthly Archives: February 2012

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், கொடிக்குளம்

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், கொடிக்குளம், மதுரை மாவட்டம்.

+91- 452 – 2423 444, 98420 24866 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 – 10.30 மணி. பிற நேரங்களில் தரிசிக்க கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு செல்ல வேண்டும்.

மூலவர்

வேதநாராயணன்

தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

ஜோதிஷ்குடி

ஊர்

கொடிக்குளம்

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர். இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும் படைப்புத்தொழில் செய்ய, பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாகக் காட்சி தந்து வேதங்களைத் திருப்பி தந்தார். அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, “வேதநாராயணன்என்றும் பெயர் பெற்றார்.

ஸ்ரீரங்கம் தலைமை பீடப் பொறுப்பில் நம்பிள்ளை என்ற மகான் இருந்தார். “லோகாச்சாரியார்என்ற பட்டம் பெற்ற அவரது சீடரான, வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை, பெருமாளின் தீவிர பக்தர். இவருக்கு 1205, ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில், பெருமாளின் அம்சமாக ஆண்குழந்தைபிறந்தது. குழந்தைக்கு தன் குருவின் பெயரைச் சேர்த்து பிள்ளை லோகாச்சாரியார்எனப் பெயரிட்டார். கற்றுத்தேர்ந்த லோகாச்சாரியார், பெருமாள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1323ல், ஸ்ரீரங்கம் கோயிலை சேதப்படுத்த அந்நியர்கள் வந்தனர். அப்போது பிள்ளை லோகாச்சாரியாருக்கு வயது 118. தள்ளாத வயதிலும் உற்சவர் அழகிய மணவாளனைக் காக்க நினைத்த அவர் மூலவர் சன்னதியை மறைத்து சுவர் எழுப்பி, முன்பகுதியில் வேறு ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிட்டு, தாயார்களுடன் உற்சவரை மூடு பல்லக்கில் வைத்து சீடர்களுடன் தெற்கே கிளம்பினார். பல துன்பங்களுக்கிடையில் கொடிக்குளம் வந்தார். வேதநாராயணரை வழிபட்ட அவர், கோயிலின் பின்புறமுள்ள குகையில் அழகிய மணவாளரை மறைத்து வைத்து பூஜை செய்தார்.

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை, மதுரை மாவட்டம்.

+91- 98425 06568 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சித்திரரத வல்லப பெருமாள்

தாயார்

செண்பகவல்லி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்டுபோன அசுரர்களை எல்லாம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மிருத்யசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்து காப்பாற்றி வந்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், வியாழ பகவானின் (குரு) மகன் கசனை அழைத்து, “உனது தியாகத்தால் தான் அசுரர்களை வெல்ல முடியும். எனவே நீ அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று குருகுல வாசம் செய்து மிருத்யசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வர வேண்டும்என்றார்கள். தேவர்கள் கூறியதுபோலவே கசனும் தன் தந்தை வியாழபகவானிடம், “நான் திரும்பி வரும் போது பிரம்மச்சாரியாகத்தான் வருவேன்என்று சபதம் செய்து விட்டு, அவரது ஆசியுடன் அசுரகுருவிடம் சென்றான். அசுரலோகம் சென்ற அவன், சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையெல்லாம் கண்காணித்து வந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து கசனை கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். அதன்படி கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அசுரகுருவும் ஏதும் அறியாமல் குடித்து விட்டார். கசனை காணாத தேவயானி, தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் கசனின் இருப்பிடத்தை கண்டறியும்படி வேண்டினாள். அசுரகுருவும் தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து தன் மகளை தேற்றினார். தேவயானியின் விருப்பப்படி மிருத்யசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார்.