Monthly Archives: November 2011

தர்மலிங்கேஸ்வரர் உடனுறை சர்வமங்களா தேவி திருக்கோயில், நங்கநல்லூர்

அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் உடனுறை சர்வமங்களா தேவி திருக்கோயில், நங்கநல்லூர், திருவள்ளூர்(சென்னை) மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தர்மலிங்கேஸ்வரர் (தன்மீஸ்வரர், வீரசிங்கர்)
அம்மன் சர்வமங்களா தேவி
தல விருட்சம் வில்வம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தன்மீச்வரம்
ஊர் நங்கநல்லூர்
மாவட்டம் திருவள்ளூர்(சென்னை)
மாநிலம் தமிழ்நாடு

சோழ அரசன் ராஜராஜன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது காரியாதித்த சோழன் குறுநில மன்னனாக இருந்தான். இவன் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதி கோயில்களில் உழவாரப்பணி செய்தான். ஒரு முறை இவன் தன்மீச்வரம் வந்தபோது அங்கு பசுமையாக வயல்வெளிகள் காட்சி தந்ததை பார்த்து அன்றிரவு அங்கேயே தங்கினான். இரவு முடிந்து பகல் விடிந்தும் அரசன் எழுந்திருக்காததை கண்ட வீரர்கள், அவனை எழுப்பவும் பயந்தனர். இந்த நேரத்தில் கோயில் மணி ஓசை மிக சத்தமாக கேட்டது. மன்னன் விழித்துக் கொண்டான். ஓசை வந்த திசை நோக்கி சென்ற சோழ மன்னனுக்கு இலிங்க வடிவில் காட்சி தந்தார் சிவன். இந்த தரிசனத்தினால் மன்னன் மகிழ்ந்தாலும், கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பது கண்டு வருந்தினான். அத்துடன் தன்னை எழுப்பிய ஈசனின் ஆலயத்தில் தினமும் கோயில் மணியோசை கேட்க வேண்டும் என நினைத்தான்.

தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மலிங்க மலை

அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மலிங்க மலை, மதுக்கரை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 98422 22529

காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தர்மலிங்கேஸ்வரர்
அம்மன்
தல விருட்சம் வில்வமரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தர்மலிங்க மலை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கு தனி சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதைக் காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.