Monthly Archives: November 2011

காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காளஹஸ்தி, உத்தமபாளையம்

அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காளஹஸ்தி, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.

+91- 4554 – 265 419, 93629 93967.

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருக்காளாத்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் ஞானாம்பிகை
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் உத்தரவாகினி
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் உத்தமபாளையம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர், அடிக்கடி அத்தலத்திற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு வயதானபோது, காளஹஸ்தி செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர், சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு இத்தலத்தில் காட்சி தந்த காளாத்தீஸ்வரர், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே இலிங்க ரூபமாக எழுந்தருளினார். சிவன், “காளாத்தீஸ்வரர்என்றும், தலம் தென்காளஹஸ்திஎன்றும் பெயர் பெற்றது.

ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573-221 223, 221 241

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர்
தீர்த்தம் ஜடா மகுட தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வேத வியாசரின் மகனாகிய கிளி முகம் கொண்ட சுகர் பல்வேறு யாகங்களை செய்தார். ஆனால், தவயோக ஞானசித்திகளை அடைய முடியவில்லை. ராஜமுனி ஜனகரின் அறிவுறைப்படி சுகர் ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி, தியானலிங்க மூர்த்திகளாக விளங்கிவரும் ஞானேஸ்வரர், அஞ்ஞானேஸ்வரரை வழிபட்டு ஞானியாக திகழ்ந்தார்.

கொடுங்கோபியாகிய துர்வாச முனிவரும், சாந்தசீலராகிய பிருகு முனிவரும் வெவ்வேறு காலங்களில் புனித நீராடி அரிதான யோகசக்திகளை பெற்ற சிறப்புடையது இந்த ஜடாமகுட தீர்த்தம்.