Category Archives: கேரளா

அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர்

அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 480-280 3061.

காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பகவதி அம்மன்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – கொடுங்கலூர்

மாவட்டம்: – திருச்சூர்

மாநிலம்: – கேரளா

சிலப்பதிகாரத்தில் கோவலன் செல்வப் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கண்ணகியை திருமணம் செய்கிறான். ஆனால் நடனமங்கை மாதவியின்பால் ஈர்க்கப்பட்டுத் தன் செல்வங்களை இழந்து மிகவும் இன்னலுறுகிறான். சொத்துக்களை இழந்த அவன், கடைசியில் மனைவி கண்ணகியுடன் பிழைப்பு தேடி மதுரை வருகிறான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கும் போது, அச்சிலம்பும் மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க, இவன் மேல் திருடன் எனும் பழி விழுகிறது. கோவலன் குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கொல்லப்படுகிறான்.

கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசவைக்குச் சென்று தன் கணவன் கள்வனல்ல என் நிரூபிக்கிறாள். பின் மன்னனை சபிக்கிறாள். சினம் தாங்காது மதுரையை எரித்து விடுகிறாள். பின்னரும் அடங்காச் சினத்துடன் சேர நாடு நோக்கி செல்கிறாள். இவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்கிறான். இதுவே தற்போது அமைந்துள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலாகும்.