Category Archives: கேரளா

அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு

அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு – 689 121, ஆலப்புழா மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 479 – 246 6828 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் இமையவரப்பன்
தாயார் செங்கமலவல்லி
தீர்த்தம் சங்க தீர்த்தம், சிற்றாறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்செங்குன்றூர்
ஊர் திருச்சிற்றாறு
மாவட்டம் ஆழப்புழா
மாநிலம் கேரளா

பாடியவர்கள்:

நம்மாழ்வார் மங்களாசாஸனம்

எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவரப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன் செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியானல்லால் யாவர் மற்று என் அமர்துணையே.

நம்மாழ்வார்

பாரதப்போரில் தன் குருவான துரோணாச்சாரியாரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத்தாமன் என்பவன் துரோணரின் மகன். இவன் இறந்துவிட்டான் என சொன்னால், துரோணர் நிலை குலைந்து விடுவார் என்பது திட்டம்.

அருள்மிகு சரஸ்வதி கோவில், வடக்கன்பரவூர்

அருள்மிகு சரஸ்வதி கோவில், வடக்கன்பரவூர், எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 484-552 6710 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சரஸ்வதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வடக்கன்பரவூர்
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

பரவூர் தம்பிரான் என்ற மூகாம்பிகை பக்தர், மாதம் ஒருமுறை கொல்லூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம். வயதான காலத்தில் இவரால் கொல்லூர் செல்ல முடியவில்லை.

மிகவும் வருத்தத்துடன் இருந்த அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி,”நீ இருக்கும் இடத்தருகே ஒரு கோயில் கட்டு. அங்கு நான் கலைவாணியாக அமர்ந்து அருள்பாலிக்கிறேன்என்றாள்.
அதன்படி தாமரைப் பூக்கள் அடங்கிய குளம் அமைக்கப்பட்டு, நடுவில் சரஸ்வதிக்கு கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டது.

கன்னிமூலையில் கணபதி, பிரகாரத்தில் சுப்ரமணியர், விஷ்ணு, யட்க்ஷி, ஆஞ்சநேயர், வீரபத்திரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.