Category Archives: கேரளா

அருள்மிகு சரசுவதிஅம்மன் திருக்கோவில், பனிசிகாடு

அருள்மிகு சரசுவதிஅம்மன் திருக்கோவில், பனிசிகாடு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-0481 – 233 0670, 233 0020 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சரசுவதி அம்மன்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் பனிசிகாடு
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

இவ்வூரில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. கிழுப்புரம், கரிநாடு, கைமுக்கு என்ற மூன்று நம்பூதிரி குடும்பத்தினர் பூஜை செய்து வந்தனர்.
இவர்களில் கிழுப்புரம் தாமோதரன் குடும்பத்தினருக்கு வாரிசு இல்லை.

இதுகுறித்து, சரசுவதியின் சொரூபமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அம்பாளிடம் தன் குறை சொல்லி, அங்கேயே தங்கி வழிபட்டார்.

ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய அம்பிகை, “பூர்வ ஜென்ம வினைப்பயனால் இப்பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. உன் வீட்டின் அருகில் உள்ள நம்பூதிரியின் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும். அதைத் தத்தெடுத்து வளர்த்து வாஎன்றாள். அதன்படி பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தையைத் தத்து கொடுக்கும்படி கேட்டார் தாமோதரன்.
அவர்களோ தங்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தால், தத்து கொடுப்பதாகச் சொல்லிவிட்டனர்.

வருத்தமடைந்த தாமோதரன், மூகாம்பிகை கோயிலுக்கு, தான் கொண்டு சென்ற குடையுடன் பெருமாள் கோயிலுக்கு வந்தார். குடையை ஓரிடத்தில் வைத்து விட்டு, கோயில் குளத்தில் நீராடினார். திரும்பி வந்து குடையை எடுத்த போது அதை எடுக்க முடியவில்லை.

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சக்குளத்துக்காவு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் சக்குளத்துக்காவு
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த வேடன் அதைக் கொல்லும் முடிவுடன் விரட்டினான்.

ஒரு புற்றை நோக்கி ஓடிய பாம்பு, அதன் மீது ஏறி புற்றில் இருந்த துளைக்குள் செல்ல முயன்ற போது, வேடன் அதை வெட்டினான். ஆனால், பாம்பு வெட்டுப்படவே இல்லை. மாறாக சீறிக்கொண்டு படமெடுத்தது. சற்று நேரத்தில் புற்றிலிருந்து ஒரு தண்ணீர் ஊற்று கிளம்பியது. பாம்பு மறைந்து விட்டது.