Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர்

அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 4561-257 201, 257 213, 98424 59146

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பாகம்பிரியாள்

தீர்த்தம்: – வாசுகி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – திருவெற்றியூர்

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்துவங்கினான்.

நாரதரும் சிவபெருமானும்:

இதனை அறிந்த நாரதர் நேராகக் கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான்,”முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,” என்றார்.

அருள்மிகு பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி

அருள்மிகு பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி -614 602 புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:- பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ)மகாலட்சுமி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – குறிச்சி

மாவட்டம்: – புதுக்கோட்டை

மாநிலம்: – தமிழ்நாடு

 

பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோட்டில் பட்டுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் குறிச்சி என்ற கிராமத்தில் தனராமலிங்க தேவர் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

ஆன்மிகவாதியான அவர் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதியையும், சோதிடம், பரிகாரம் செய்தல் ஆகிய பணிகளையும் செய்துவந்தார். அப்போது அருகிலுள்ள பாலத்தளி கிராமத்தினர் தனராமலிங்கத்தேவரை சந்தித்து துர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வழிகேட்டனர். அவரது பெரும் முயற்சியால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் அசரீரி ஒலித்தது. அவரிடம், “ஒரு குறிப்பிட்ட இடத்தில், உன் மனதில் உள்ளபடி எனது தோற்றத்தை சிலையாக வடித்து தயாராக வை. சித்தர் ஒருவர் உன்னை தேடி வருவார். அவரது ஆலோசனைப்படி சிலையை வைக்கலாம்,” என கூறியது.