Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்-600 090. சென்னை.

+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: அட்டலட்சுமி, மகாலட்சுமி,திருமால்

தாயார்: ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விசயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி

தீர்த்தம்: சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)

பழமை : 25 வருடங்களுக்கு முன்

ஊர் : பெசன்ட் நகர்

மாவட்டம் : சென்னை

மாநிலம் : தமிழ்நாடு

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது.

இந்த கடற்கரைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

அருள்மிகு அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம்

அருள்மிகு அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, அம்மன் நகர், பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம் – 639 202. கரூர் மாவட்டம்.

+91- 4320 – 233 344, 233 334, 94432 – 37320.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 5முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அருங்கரை அம்மன், நல்லதாய்

தல விருட்சம்: – ஊஞ்சல்மரம்

தீர்த்தம்: – அமராவதி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பெரியதிருமங்கலம்,பெரியமங்கலம்.

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தனர். ஒருசமயம் ஒரு மீனவர் ஆற்றில் வலைவீசிய போது, பெட்டி ஒன்று சிக்கியது. அதை திறந்தபோது, அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்ததைக் கண்டான். அம்பாள் தனக்கு அருள்புரிவதற்காகவே ஆற்றில் வந்ததாக கருதிய அவன் ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் பெட்டியை வைத்தான். மீனவர்கள் அம்பாளுக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது.