Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம்

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம் – 641 606 திருப்பூர் மாவட்டம்.

+91- 421-220 3926, 224 0412.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:அங்காளம்மன்

தல விருட்சம்: வேம்பு

பழமை:500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:முத்தனம் பாளையம்

மாவட்டம்: திருப்பூர்

மாநிலம்: தமிழ்நாடு

சுமார் 800 வருடங்களுக்கு முன் இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் புதர்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. இந்த காட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தார்களின் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வரும். அவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளில், அருகிலிருக்கும் மணியம்பாளையத்தை சேர்ந்த பசு ஒன்று, புற்று வடிவில் சுயம்புவாக எழுந்திருக்கும் கருநாக ரூபிணிக்குத் தானாக பால் சுரந்து கொடுத்து விட்டு வந்து விடும். இதனால் அது ஈன்ற கன்றுக்கு கூட பால் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பசுவின் சொந்தக்காரர் மாடு மேய்ப்பவனை கண்டிக்கிறார். அத்துடன் பசுவையும் கண்காணிக்கிறார். அப்போதுதான் பசுவானது சுயம்புவுக்குத் தானாக பால் சுரப்பதை நேரில் கண்டார்.

அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம்

அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம், தூத்துக்குடி மாவட்டம்

காலை 7 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அலங்காரச் செல்வி அம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்பு

ஊர்: – வசவப்புரம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

கலியுகத்தில் கணபதியும், துர்க்கையும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகின்றன. வெற்றிக்கு காளியின் அம்சமான துர்க்கையே அதிபதி. இவளே மகாகாளியாகவும் , மகாலட்சுமியாகவும், மகாசரசுவதியாகவும் விளங்குகிறாள். துன்பங்களை போக்கி, இன்பத்தைக் கொடுப்பவள் மகா சக்தி. காளி, “துர்க்கமன்என்ற அரக்கனை போரில் வதம் செய்ததாலும், ஆன்மாக்களை (அடியார்களை) அரண் போன்று காப்பாற்றுவதால் துர்க்கையென்றும் பெயர் பெற்றார். தென்மாவட்டங்களில் ஊருக்கு காவல் தெய்வமாக விளங்கும் காளியின் அம்சம் கொண்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்கள் உள்ளன. வடக்கு வாசலை கொண்ட அலங்கார செல்வி அம்மன் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வசவப்பபுரம் அலங்கார செல்வி அம்மன் கோயிலில் அலங்கார செல்வி அம்மன் நிறுவனம் செய்யப்பட்டுள்ளது.