Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர்

அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர் – 604 204. விழுப்புரம் மாவட்டம்.

+91 – 4145 – 234 291

காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

மூலவர்: – அங்காளபரமேஸ்வரி

தல விருட்சம்: – வில்வம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மேல்மலையனூர்

மாவட்டம்: – விழுப்புரம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார்.

அருள்மிகு அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு

அருள்மிகு அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு விருதுநகர் மாவட்டம்.

+91-94437 74299

காலை 6 முதல் 12 மணிவரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர்: – அங்காள ஈஸ்வரி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மாந்தோப்பு

மாவட்டம்: – விருதுநகர்

மாநிலம்: – தமிழ்நாடு

கன்னிப்பெண்களின் காவல் தெய்வமான அங்காள ஈசுவரி விருதுநகர் மாவட்டம், மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாதசுவாமியுடன் அருள்பாலித்து வருகிறாள். இவளை பார்த்தால் பெற்ற தாயை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். பல நூற்றாண்டுகளாக இத்தலத்தில் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் முறைப்படி கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இங்கு புள்ளி மான்கள் விளையாடித் திரிந்ததால் மான்தோப்புஎன அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மாந்தோப்பு ஆனது.

இத்தலத்தில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர் என 21 பந்தி தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.