Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம்

அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம் – 638001, ஈரோடு மாவட்டம்.
**********************************************************************************************************
+91-424 – 2430114 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – சின்ன மாரியம்மன்

தல விருட்சம்: – வேப்பமரம், அரசமரம்

பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – கருங்கல்பாளையம்

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

வீட்டில் குழந்தைகள் கடவுள் பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள். அதுபோல, ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு கூழாங்கல்லை வைத்து விளையாட்டாக சிறுவர், சிறுமிகள் விளையாடிய இடம் ஒரு கோயிலாக மாறி விட்டது. இதையே நாளடைவில் அம்மனாக வழிபட்டனர். பின்னர் சிறிய கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிட்டை செய்யப்பட்டது. சிறுவர்கள் கட்டிய கோயில் என்பதால், சின்ன மாரியம்மன் கோயில் எனப் பெயர் பெற்றது. இந்த கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது.

இந்த கோயிலின் வாசலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது. அதே போல் பூவோடு எடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்ட விழவின் ஒரு அங்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டு வருவர்.

திருமுகன்பூண்டியில் இருந்து அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு கடந்த 1989ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கோபுரம் கட்டப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை-625 001.
********************************************************************************************
மதுரைமாவட்டம்.
********************

+91- 98655 82272

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – செல்லத்தம்மன், கண்ணகி

தல விருட்சம்: – வில்வம், அரசு

தீர்த்தம்: – வைகை

ஆகமம்/பூஜை: – சாக்தாகமம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மதுரையம்பதி

ஊர்: – மதுரை

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, அவர்களை மதுரையிலுள்ள மாதரி என்பவளின் வீட்டில் அடைக்கலமாக தங்கச் செய்தாள். கண்ணகியின் கணவன் கோவலன், மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் ஊருக்குள் சென்றான்.

இவ்வேளையில், அவ்வூரை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பை அபகரித்த அரண்மனை பொற்கொல்லன், அந்தப் பழியை கோவலன் மீது போட்டான். இதை தீர விசாரிக்காத பாண்டியன், கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டார்.

கணவனை இழந்த கண்ணகி கோபத்துடன் பாண்டியன் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினாள்.

தவறை உணர்ந்த மன்னனும், ராணியும் அக்கணமே உயிர்விட்டனர். பிற்காலத்தில் கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளைத் தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர். செண்பகப்பாண்டியன் காலத்தில் இது அம்மன் கோயிலாகி விட்டது.

இத்தலவிநாயகர் அனுக்கை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் துர்க்கை, மீனாட்சி சுந்தரேசுவரர், அய்யனார், காலபைரவர் ஆகியோர் இருக்கின்றனர். முன் மண்டப தூண்களில் அட்ட(8) காளி சிற்பங்கள் உள்ளன.