Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்– 625 214, மதுரை மாவட்டம்.

*******************************************************************************************************

+91-4543-258987, 94431 92101(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

ரேணுகாதேவி சமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூசைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வனின் நிழலை நீரில‌ே கண்டு அவன் அழகில் மயங்கி வியந்ததால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.

மகன் பரசுராமரை அழைத்து, தாயின் தலையை வெட்டிக் ‌கொண்டு வரும் படி கூற, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாக்குகிணங்க அன்னையின் தலையைப் பரசுராமர் கொய்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி ‌‌கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதித் தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்துத் தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அரக்கியின் சினம் அதிகரிக்கின்றது. அரக்கியை அடக்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதியின் வடிமாக மாரி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோச ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.

அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியின்‌ வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, விருதுநகர் மாவட்டம்.
*****************************************************************************************************

+91-4562 259 614, 259 864, 94424 24084

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30-மதியம் 1 மணி, மாலை 4- இரவு 8 மணி. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30-இரவு 8.30 மணி.

மூலவர்: – மாரியம்மன்

தீர்த்தம்: – அர்ச்சுனா, வைப்பாறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – இருக்கன்குடி

மாவட்டம்: – விருதுநகர்

மாநிலம்: – தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள சதுரகிரி மலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்மனின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. “சித்தரே! அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வாஎன்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் சிலையாகப் பிரதிட்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது.

பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமி பசுஞ்சாணம் சேகரிக்கும் தொழில் செய்தாள். ஒரு சமயம் தரையில் வைத்த சாணக்கூடையை தூக்க முடியவில்லை. பெரியோரை அழைத்து வந்தாள். அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன், அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர்.

மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுனன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆற்தான் அர்ச்சுனா ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் நீராடி மகிழ்ந்தனர்.