Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு துர்க்கை கோயில், பட்டீசுவரம்

அருள்மிகு துர்க்கை கோயில், பட்டீசுவரம், தஞ்சை மாவட்டம்
**********************************************************************

மூலவர்:பட்டீசுவரர்

அம்மன்: பல்வளைநாயகி

தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்:ஞானவாவி

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்:மழபாடி, திருப்பட்டீசுவரம் ஊர்:திருப்பட்டீச்சுரம்

மாவட்டம்: தஞ்சாவூர்

மாநிலம்: தமிழ்நாடு

பட்டிக்கன்று மணலினால் ஓர் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

அருள்மிகு தேனுபுரீசுவரர் ஆலயம், பட்டீசுவரத்தில் உள்ளது. பட்டீசுவரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீசுவரம் கோவிலில் பிரதிட்டை செய்தார்கள்.

தேவலோகப் பசுவான காமதேனுவின் மகள் பட்டி, இங்கே ஈசனைப் பூசித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் என்றாயிற்று. கோயிலின் வடக்கு வாயிலில் சுமார் ஆறடி உயரமுள்ள துர்க்கை அருள்கிறாள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலங்களிலும், அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, நவமி திதிகளிலும் இந்த துர்க்கை கோலாகலமாக பூசிக்கப்
படுகிறாள். சாந்த வடிவமாக, எட்டுத் திருக்கரங்கள், முக்கண்களுடனும், காதில் குண்டலங்கள் துலங்க அன்னை மீனாட்சியைப் போலவே கையில் கிளி ஏந்திப் பரவச தரிசனம் அளிக்கிறாள் துர்க்கை.

அன்னை கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் போன்றவற்றை ஏந்தி வலக் கரத்தை அபயமாகவும், இடக்கரத்தை தன் தொடையின் மீது இருத்தியும் அழகே வடிவாய் உள்ளாள். பொதுவாக காளி மற்றும் துர்க்காம்பிகைக்கு சிம்ம வாகனம் மேற்கு நோக்கியே காணப்படும். ஆனால் இந்த துர்க்கையின் சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி வித்தியாசமாகக் காணப்படுகிறது.

இந்த அன்னைக்கு அடிக்கடி சண்டி யாகம் நடப்பதால், சண்டி யாகத்திற்கென்றே ஒரு மண்டபம் ஆலயத்தில் உள்ளது.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், எல்லீஸ்நகர், மதுரை

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், எல்லீஸ்நகர், மதுரை, மதுரை மாவட்டம்
******************************************************************************************************
+91 99409 46092, 97897 91349(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்: – அரசமரம், வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மதுரை எல்லீஸ் நகர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன் காடாக இருந்த இப்பகுதியில் தானாக கிடைத்த சூலாயுதத்தை வைத்து மக்கள் சில காலம் வழிபட்டு வந்தனர்.

பின் சுயம்புவாக கிடைத்த மார்பளவு கருமாரி சிலையை வைத்து அதை மூலவராக வழிபாடு செய்து வருகிறார்கள்.

இங்கு கோயிலுக்கு முன்னும், பின்னும் அரசும் வேம்பும் இணைந்து வளர்ந்து வருகின்றன. இதில் கோயிலின் முன் அம்மனின் பார்வையில் உள்ளதில் வேப்பமரம் பெரியதாகவும் அரசமரம் சிறியதாகவும் வளர்ந்துள்ளது. அதே போல் கோயிலின் பின் உள்ளதில் அரசு பெரியதாகவும் வேம்பு சிறியதாகவும் வளர்ந்துள்ளது.

கிழக்கு பார்த்த இச்சன்னதியில் ஐம்பொன்னில் அமைந்திருக்கும் உற்சவ மூர்த்திக்கு நாள்தோறும் வெவ்வேறு அலங்காரம் சிறப்பாகச் செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

மங்கையர் மனம் கலங்கினால் இந்த மகமாயிக்கு மனம் தாங்காது. இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே நமது தேவையறிந்து கொடுத்து காத்திடுவாள் தேவி கருமாரி.