Category Archives: முருகன் ஆலயங்கள்

சண்முகநாதப் பெருமான் – குன்றக்குடி

சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியன் மன்னன் பெரிய மருதுவுக்கு முதுகில் “இராசபிளவை” என்னும் கடுமையான கட்டி வந்தது. அப்பொழுது குன்றக்குடியில் உப்பு வணிகம் செய்து வந்த காடன் செட்டியாரை அணுகினார். அவரும் குன்றக்குடியானை மனதில் வேண்டி விபூதி கொடுத்தார். பெரிய மருதுவின் துன்பம் நீங்கியது. அன்றிலிருந்து குன்றக்குடி சண்முகநாதப் பெருமானின் மீது அளவற்ற பக்திகொண்டான். குதிரையி வரும்பொழுது எந்த இடத்தில் கோயில் தென்படுகிறதோ, அதே இடத்தில் குதிரையை விட்டு இறங்கி கோயில் வரை நடந்தே வருவாராம்.

மயில் படுத்து அடைகாப்பதைப்போன்ற மலையின்மீது பெருமானுக்குத் திருக்கோயில் எழுப்பினான். மலையின் சுற்றளவு 1 கல் தொலைவு. கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மலையேறும் படிகள் மயிலின் தோகை போலிருக்கும். ஒட்டுமொத்தமாய், முருகனின் வாகனமே அவனிருக்கும் மலையாக இருப்பதே குன்றக்குடியின் விதப்பு. மலையின் 120 படிகளும் கல்வெட்டுக்கள்தான். நேர்த்திக்கடனுக்காகப் பக்தர்கள் செதுக்கியவைகள்.