Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, சென்னை

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 94442 80595, 94441 71529

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: பாலசுப்பிரமணியர்

பழமை: 500 வருடங்களுக்கு முன்

ஊர்: சிறுவாபுரி, சின்னம்பேடு

மாவட்டம் : திருவள்ளூர்

மாநிலம்: தமிழ்நாடு

பாடியவர்கள்: அருணகிரிநாதர்

இராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார். மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாகக்குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர இலட்சுமணனை அனுப்பினார் இராமர். இலட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை. இதனால் இராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தியாகும். இந்த வரலாற்று செய்தியை, “சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது. இராமனிடம் இலவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரிஎன்ற சின்னம்பேடுஎன்றும் இத்தல வரலாறு கூறுகிறது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடுஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.

இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார்.

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4542- 266 378, +91- 99626 71467

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலமுருகன்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

தாண்டிக்குதி

ஊர்

தாண்டிக்குடி

மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமான் தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி, தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் தாண்டிக்குதிஎன்ற அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி தாண்டிக்குடிஆனது.

பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகனே கோயில் கட்ட தேவையான பொருள்களுக்கு அது சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி, அந்தப் பொருள்களை கொடுக்க கூறினார் என்றும், தற்போது கோயிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்று, திருப்பணிவேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது.