Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+91 – 4577 – 264227, 97905 83820

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்

சண்முகநாதர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்

அரசமரம்

தீர்த்தம்

தேனாறு

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

அரசவனம்

ஊர்

குன்றக்குடி

மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சூரனாதியோர் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை, நாங்கள்தான் மயிலை விட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாகப் பொய் சொன்னதால், மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போகச் சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கித் தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாகத் தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து, சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலைஎன்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கள். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டர். மலை மீதுள்ள இராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டர். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டர். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

அருள்மிகு இரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி

அருள்மிகு இரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 – 422- 553 5727 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இரத்தினகிரி முருகன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

சரவணம்பட்டி

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து, அண்டசராசரங்களையும் அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவர் தலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் முறை இந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான். இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் இரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த இரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி இரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி, கடும் விரதம் மேற்கொண்டார். ஓரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் இரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.