Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் கோயில், பூவரசன்குப்பம்

அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் கோயில், பூவரசன்குப்பம், மோட்ச குளம் வழி, விழுப்புரம் மாவட்டம்.

+91-413 269 8191, 94439 59995

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இலட்சுமி நரசிம்மர்

உற்சவர்

பிரகலாத வரதன்

தாயார்

அமிர்தவல்லி

தல விருட்சம்

நெல்லி

தீர்த்தம்

சக்கர தீர்த்தம்

ஆகமம்

பாஞ்சராத்திரம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தெட்சிண அகோபிலம்

ஊர்

பூவரசன்குப்பம்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் இரண்யனை அழித்த பிறகு உக்கிரம் தணியாமல் அலைந்தார். இரணியனின் கொடுமைக்குப் பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து தவமிருந்த முனிவர்கள் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டினர். அப்படி காட்சியளித்த தலங்கள் தமிழகத்தில் எட்டு உள்ளது. இத்தலத்தின் கிழக்கே சிங்கரி கோயில், மேற்கே அந்திலி, பரிக்கல், வடக்கே சோளிங்கர், சிங்கப் பெருமாள் கோயில், தெற்கே நாமக்கல், சிந்தலவாடி ஆகியன அமைந்துள்ளன. சோளிங்கரிலும் அந்திலியிலும் யோக நரசிம்மராகவும், சிங்கிரியில் உக்கிர நரசிம்மராகவும், பூவரசன் குப்பத்தில் இலட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக் கிறார் நரசிம்மர்.

நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலாதனுக்குக் காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் அகோபிலம்என்றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் தென் அகோபிலம்எனவும் அழைக்கப்படுகிறது.

அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம்

அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4147-225 077, 99432 40662 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

லட்சுமி நரசிங்கப்பெருமாள்

உற்சவர்

வரதராஜப்பெருமாள்

தாயார்

மகாலட்சுமி

தல விருட்சம்

மருதமரம், நெல்லி

தீர்த்தம்

ராய தீர்த்தம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

திண்டிவனம்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன். அசுரகுலத்தில் பிறந்தாலும், நாராயணனின் பக்தனாக இருந்தான். அந்நாட்டில், இரணியனையே மக்கள் கடவுளாக வணங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மகனே மீறியதால், அவனைத் துன்பம் செய்தான் இரணியன். நாராயண பக்தி செய்ததற்காக, பெற்ற பிள்ளையையே கொடுமை செய்ததைக் கண்ட திருமால் அவனை அழிப்பதற்காக மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். “நரன்என்றால் மனிதன்.” “சிம்மம்என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபத்தினால் உலகம்நடுங்கியது. இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும்படி மகாலட்சுமியை வேண்டினார். தாயார் பெருமாளிடம் சினம் தணியும் வகையில் ஆசுவாசப் படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது. இந்தத் தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய இலட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. லட்சுமிக்கு இக்கோயிலில் முக்கியத்துவம் என்பதால் நரசிம்ம லட்சுமிகோயில் என்று இதற்கு பெயர் வந்து விட்டது.

முன்காலத்தில் திண்டிவனம் புளியமரக்காடாக இருந்தது. வட மொழியில் திந்திருணிஎன்பது புளியமரத்தை குறிக்கும். “திந்திருணி வனம்என்பது மருவியே திண்டிவனம் ஆனது. திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.