Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஸ்ரீநிவாசப்பெருமாள்

தீர்த்தம்

கோனேரிதீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருமலை

ஊர்

திருவண்ணாமலை

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களை காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார். சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருளி உள்ளார். அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். மலை மீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. கோயிலுக்‌கு முன்பாக உள்ள தடாகம் அற்புதமாக உள்ளது.

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம்

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேணுகோபால பார்த்தசாரதி,செம்பொன்ரங்க பெருமாள்

தாயார்

பத்மாவதி, ஆண்டாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

செங்கண்

ஊர்

செங்கம்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

இராமாயண காலத்தில் இராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் இராவணன் கொல்லப்பட்டான். இதனால் இராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் தீர இத்தலத்திற்கு வந்து 13 நாட்கள் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று பிரம்மன் கூறினார். இதன்படி இராமனும் இத்தலம் வந்து 13 நாட்கள் தங்கி வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கியதாக தலபுராணம் கூறுகிறது.

கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்கப் பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக்கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர்.