Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம் – 623 526. ராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573 – 221 223, 97912 45363 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 – மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோதண்டராமர்
உற்சவர் ராமர்
தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோதண்டம்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அவனது கருத்தை ஏற்க மறுத்ததோடு, காலால் எட்டி உதைக்கச் சென்றான். எனவே, விபீஷணன் இராவணனைப் பிரிந்து இராமபிரானிடம் வந்தான். இராமபிரான் இராமேஸ்வரத்தில் தங்கியிருந்ததை அறிந்த அவன் அவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அவனது நற்குணத்தை அறிந்த ராமன், அவனைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். மேலும், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே முறைப்படி விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். இதனடிப்படையில் இங்கு ராமருக்கு கோயில் எழுப்பப்பட்டது. கோதண்டராமர் என்ற திருநாமம் அவருக்குச் சூட்டப்பட்டது.

அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை

அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை, கரூர்

ஒரு காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் ஊழ்வினை மற்றும் ஒற்றுமை இல்லாமை காரணமாக அனைத்தையும் இழந்து அதிகார உரிமை துறந்து அநாதரவாக நிற்பார்கள்.

பொருளாதாரத்தில் பெருமளவு அவர்கள் நசிந்து போயிருந்தாலும் ஒரு காலத்தில் பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் என்கிற காரணத்தால் அந்தக் குடும்படத்தின் பெருமையும், புகழும் என்றென்றும் உயர்ந்த மதிப்புடன்தான் இருக்கும். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கிராமங்களில் ஒரு சில குடும்பத்தினரை அடையாளம் காட்டிப் பேசுவார்கள். அதுபோன்ற குடும்பங்களில் சிலது இருக்கும். சிலது இருக்காது. உதாரணத்துக்கு அவர்களிடம் புகழ் இருக்கும். பொருளாதாரம் இருக்காது. அன்பு இருக்கும், அதிகாரம் இருக்காது. உண்மை இருக்கும், ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். வரலாறு இருக்கும். வசதிகள் இருக்காது.

கரூர் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் ஆலயமும் கிட்டத்தட்ட இந்த ரகம் என்றே சொல்லலாம். அதாவது ஒரு காலத்தில் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அனைத்து உற்சவங்களும் விமரிசையாக நடந்து வீதிகளில் பிரமாண்ட தேர் ஓடி, பக்தி மழையில் திளைத்திருந்த திருக்கோயில்தான் இது. ஆனால் இன்று நிலை வேறு.

பவித்திரம் இருக்கிறது. பக்தர்கள் இல்லை. குறையாத சாந்நித்யம் இருக்கிறது; கோலாகல உற்சவங்கள் இல்லை. ஆன்மிக மனம் அளவில்லாமல் கமழ்கிறது. மணம் வீசும் மடப்பள்ளி இல்லை.