Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு பகவதியம்மன் கோயில், செங்கன்னூர்

அருள்மிகு பகவதியம்மன் கோயில், *********************************************************

செங்கன்னூர், கேரள மாநிலம் 

************************************************

கேரள மாநிலம் செங்கன்னூரில் வீற்றிருக்கும் பகவதியம்மன் உருவத்துக்கு சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போல மாத விலக்கு ஏற்படுகிறது. அதிசயம்தான். அற்புதம்தான். அறிவுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுதான். எங்குமே கேள்விப்படாத விஷயம்தான். மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்தான். நம்ப முடியாதுதான். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். காலம் காலமாய் நடந்து வரும் நிகழ்ச்சி இது.

செங்கன்னூர் பகவதியின் வரலாறு: ****************************************************   பார்வதியாம் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனைத் தவிற அனைவரையும் அழைத்தான். இது கேட்ட தாட்சாயணி அதிர்ச்சியுற்று சினம் மிகக் கொண்டாள். யாகத்தைத் தடுப்பதற்காக இறைவனிடம் சென்று தந்தை வீடு செல்ல அனுமதி கேட்டாள். இறைவனோ பின்னர் வரும் விளைவுகளை மனதில் கொண்டு அனுமதி தர மறுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. “அவமானப்படப் போகிறாய்என்னும் எச்சரிக்கையையும் மீறி இறைவனின் அனுமதியின்றி யாகம் நடக்குமிடம் சென்ற தாட்சாயணியை அலட்சியப்படுத்தினான் தட்சன்.

அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர்

அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 480-280 3061.

காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பகவதி அம்மன்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – கொடுங்கலூர்

மாவட்டம்: – திருச்சூர்

மாநிலம்: – கேரளா

சிலப்பதிகாரத்தில் கோவலன் செல்வப் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கண்ணகியை திருமணம் செய்கிறான். ஆனால் நடனமங்கை மாதவியின்பால் ஈர்க்கப்பட்டுத் தன் செல்வங்களை இழந்து மிகவும் இன்னலுறுகிறான். சொத்துக்களை இழந்த அவன், கடைசியில் மனைவி கண்ணகியுடன் பிழைப்பு தேடி மதுரை வருகிறான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கும் போது, அச்சிலம்பும் மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க, இவன் மேல் திருடன் எனும் பழி விழுகிறது. கோவலன் குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கொல்லப்படுகிறான்.

கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசவைக்குச் சென்று தன் கணவன் கள்வனல்ல என் நிரூபிக்கிறாள். பின் மன்னனை சபிக்கிறாள். சினம் தாங்காது மதுரையை எரித்து விடுகிறாள். பின்னரும் அடங்காச் சினத்துடன் சேர நாடு நோக்கி செல்கிறாள். இவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்கிறான். இதுவே தற்போது அமைந்துள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலாகும்.