எடுத்த காரியத்தில் வெற்றி பெற

எடுத்த காரியத்தில் வெற்றி பெற

காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி உறுதி.

நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.

பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி. நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.

உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.

தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம். மாறாக, எதிர்மறையான (நெகடிவ்) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால், உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக, நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.

எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள்.

சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத் தெரியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.ஆழ்ந்த சிந்தனைக்கு அதிகம் பயன் உண்டு.

சிந்தனை செய்யாமல் தொடங்கும் எந்தக் காரியமும் வீண். செயலில் குதிக்கும் முன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்பச் சிந்திக்க வேண்டும். நேர்மறையாக நல்ல முடிவை எதிர்பார்த்து மட்டுமே செயல்படாமல், எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவும், லாபம்போல நட்டத்தை சமாளிக்கவும் மனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திடமான முடிவெடுக்க வேண்டும். துணிந்தபின் விவேகம்தான் இரண்டாவது தேவை. செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு செயலில் இறங்கியபிறகு பின்வாங்கவோ, திகைக்கவோ கூடாது. வேகத்தைவிட விவேகம் முக்கியம். சிறுசிறு முயற்சியாக முன்னோக்கியே அடியெடுத்து வைக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் வெற்றியை தேடித்தரும்.
பரபரப்பான இயக்கத்தில் நாமும் ஒரு பந்தயக் குதிரை என்று எண்ண வேண்டும். நமக்கு கடிவாளம் கட்டப்பட்டு இருந்தாலும் இலக்கு ஒன்றே குறி. ஆனால் வழிகள் பல உண்டு. புதிது புதிதாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும். போட்டி இல்லாத இடமேயில்ல. தொலைநோக்கு சிந்தனையே நம்மை நிலை நிறுத்தும். காலம் ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது. இருந்தாலும் பல புதிர்களைக் கொண்டது. ஆகையால் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்தான். ஆனால் நாளைய தேவையையும், மாற்றத்தையும் யூகித்து அறிந்து செயல்பட்டால் வெற்றி கைகூடும்.
நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொக்கிஷங்கள். அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்விகளை அசைபோட்டு அனுபவப் பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் நடைபோடுங்கள். பயத்தை கைவிடுவதே வெற்றிப் பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக்கூடாது. தடங்கல்களைக் கண்டு தயங்கி நிற்க கூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும். உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான். சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. `கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும்.

அத்துடன் இறைநம்பிக்கையுடன் கீழ்கண்ட இறைவனை வணங்க வெற்றி மட்டுமே.

முத்துமலை முருகன் கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
சுந்தரராஜ பெருமாள் வேம்பத்தூர் சிவகங்கை
வீர அழகர் மானாமதுரை சிவகங்கை
காயநிர்மாலேஸ்வரர் ஆறகழூர் சேலம்

வீரஆஞ்சநேயர்

அணைப்பட்டி

திண்டுக்கல்

வண்டிக்கருப்பணசாமி அய்யலூர் திண்டுக்கல்
அபயவரத ஆஞ்சநேயர் திண்டுக்கல் திண்டுக்கல்
மம்மியூர் மகாதேவன் குருவாயூர் திருச்சூர்
அகத்தீஸ்வரர் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
பூதநாராயணப்பெருமாள் திருவண்ணாமலை திருவண்ணாமலை
காளமேகப்பெருமாள் திருமோகூர் மதுரை

கனகதுர்கா

கனகபுரி

விஜயவாடா

இலட்சுமி நாராயணர் காரிசேரி விருதுநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *