அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம்

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேணுகோபால பார்த்தசாரதி,செம்பொன்ரங்க பெருமாள்

தாயார்

பத்மாவதி, ஆண்டாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

செங்கண்

ஊர்

செங்கம்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

இராமாயண காலத்தில் இராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் இராவணன் கொல்லப்பட்டான். இதனால் இராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் தீர இத்தலத்திற்கு வந்து 13 நாட்கள் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று பிரம்மன் கூறினார். இதன்படி இராமனும் இத்தலம் வந்து 13 நாட்கள் தங்கி வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கியதாக தலபுராணம் கூறுகிறது.

கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்கப் பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக்கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர்.

அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருக்காமீஸ்வரர்

தாயார்

சாந்த நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பொன்னூர்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார். அவரது தோஷம் நீங்க அருளிய சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. பிரம்மனுக்கு பொன்னன் என்ற திருநாமமும் உண்டு. பொன்னன் எனக் கூறப்படும் பிரம்மன் வழிபட்டதன் காரணத்தால் இத்தலம் பொன்னன் ஊர் என்றிருந்து, மருவி பொன்னூரானது. பிரம்மன் வழிபட்ட காரணத்தினால் இத்தல இறைவனுக்கு பிரம்மேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி சுந்தரமூர்த்தி சுவாமிகளால் வைப்புத்தலமாக போற்றப்பட்ட சிறப்புடையது. சுந்தரரும் பொன்னார் நாட்டுப் பொன்னார் என இப்பகுதியைப் போற்றுகின்றனர். பராசர முனிவர் இங்கு தவமிருந்து இத்தல பெருமானை பூஜித்து, பேறு பெற்றுள்ளார். சிவன் சன்னதியும் அம்பிகை சன்னதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டு அமைந்துள்ளதால் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னதி தென்முகமாகவும் உள்ளது.