அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர்

அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர், சேலம் மாவட்டம்.

+91- 4282-260248, +91-99946 31830

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கரிவரதராஜப்பெருமாள்

தாயார்

கமலவல்லி

தல விருட்சம்

வில்வம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஆறகழூர்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ராஜராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் இருந்தனர். எனவே, அவர்கள் இறைவழிபாட்டை முற்றிலும் மறந்தனர். அவர்களுக்கு இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால், வருணனிடம் சொல்லி மழை பெய்யாமல் செய்தார். இதனால், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். துன்பம் வந்ததும் கடவுளின் நினைவு வந்தது. பெருமாளிடம் தங்கள் பக்தியின்மைக்காக மன்னிப்பு கோரினர். அன்றிரவில் மன்னனின் கனவில் திருமால் தோன்றி, “உங்களுக்கு செல்வம் தருவதும், அதை நிறுத்துவதும் எமது கையில்தான் உள்ளது. நிலையற்ற செல்வத்தின் பின்னால் சென்று இறைவழிபாட்டை மறக்காதீர்கள்என்றார். உண்மையை உணர்ந்த மன்னன் மன்னிப்பு கேட்டான். பின், திருமால் நாட்டில் கரிய மேகங்கள் உருவாகச் செய்து மழைபொழிவித்தார். மகிழ்ந்த மன்னன் இவ்விடத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டினான். கரிய மேகங்களை உருவாக்கி அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி கரிவரதராஜப் பெருமாள்என பெயர் பெற்றார்.

கருறையில் கரிவரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். மழை வேண்டுபவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தாயார் கமலவல்லி, சுவாமி சன்னதிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதியின் முன்புறம் நாகதேவி இருக்கிறாள்.

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம்

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இராமர்

தாயார்

சீதை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அயோத்தியாப்பட்டணம்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

இராவண வதம் முடிந்து இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட புராதன சிறப்பு மிக்க கோயில் சேலம் அயோத்தியாபட்டணம் இராமர் கோயில். வட இந்தியா சென்று அயோத்தியில் உள்ள ராமரை வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை. சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் இராமரை வழிபட்டாலே போதும். சகல புண்ணியங்களும் கிட்டும். சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று இராவணனை கொன்ற இராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைலமலைக் குன்றுகள் வழியாகய்த்தான் திரும்ப வேண்டும். இராமர், சீதை, இலட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைலமலைக் குன்றுப் பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்டத் தொடங்கியது. களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது, சிறிய அளவிலான கோயில் ஒன்று தென்பட்டது. இங்கு இராமர், சீதை, இலட்சுமணன் உட்பட அனைவரும் அன்றிரவு தங்கினர். விடிந்து எழுந்த போது பட்டாபிஷேகத்திற்கான நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டது. நேரம் தவறினால் ராஜகுற்றமாகிவிடும் என்று எண்ணிய இராமர் இந்தக் கோயிலிலேயே பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவும், பின்பு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் முடித்தார் என்றும் சொல்வதுண்டு.

புராதனச் சிறப்போடு, ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அதேசமயம் கம்பீரமான தோரணையில் வீற்றிருக்கிறது அயோத்தியாபட்டணம் கோதண்டபாணி இராமர் கோயில். இராமர் காலடி பட்டதால் அயோத்தியாபட்டணம் என்ற பெயரை இவ்விடம் பெற்றது. இங்குள்ள ஒவ்வொரு கல்லும் கவி பாடுகின்றன. கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுந்து மனதை மயக்குகின்றன. தாரமங்கலம் கைலாசநாதர் பெருமாள் கோயில், திருச்செங்கோடு முருகன் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றுடன் இந்த கோயிலும் ஒரே காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இதற்கு இங்குள்ள பிரமாண்டமான சிற்பங்களே சாட்சி.