Monthly Archives: December 2011

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-436 -2260 332, 94430 08104 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர்
அம்மன் தரும சம்வர்த்தினி
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. சிலாது மகரிஷி, ஒரு பெட்டியில் இந்தக் குழந்தையை வைத்துவிட்டு மூடித் திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுச் சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு, அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர்எனப்பட்டார்.

கரிகால் சோழன் பல்லக்கில் இப்பக்கமாக வந்துகொண்டிருந்த போது தேர்ச் சக்கரம் நிலத்தில் புதையுண்டது . அதனை எடுக்கத் தோண்டும்போது குருதி வெளிப்பட்டது . சிவலிங்கமிருப்பதை கண்ட அரசன் தன் தவறுணர்ந்து, தலையை துணிக்க முற்படுகையில் ஈசன் அசரீரியால் தடுத்தார் என வரலாறு கூறும். ஆகையால் கரிகாலன் இக்கோயிலைக் கட்டுவித்தான். சுந்தரரும், சேரமான் பெருமாளும் வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச்செய்த தலம்.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4362 326 668 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆபத்சகாயர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் கதலி(வாழை), வில்வம்
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பழனம்
ஊர் திருப்பழனம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம்என்று பெயர். நந்தியெம்பெருமானுக்கு ஈசன் மணமுடிக்க விரும்பினார் . சிலாத முனிவருடைய மகனான நந்திக்கு திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. நந்தியும் ஈசனுடைய பிள்ளை போன்றவராதலால் அவரை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர ஈசன் விரும்பினார். அவ்வூர்வலம் திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் வழியாக மீண்டும் திருவையாற்றை வந்தடையும்.

திருமண நாளன்று ஈசன் கண்ணாடிப்பல்லக்கில் எழுந்தருளியிருக்க, நந்தி அவருடன் மனைவி ஸ்வயம்ப்ரகாசையுடன் இருக்க, ஏழூர் உற்சவமாகச் செல்வதுதான் சப்தஸ்தான ஐதீகமாகும் . இதில் மற்றுமொரு சிறப்பு என்னவெனில் ஏழூருக்கும் பல்லக்கு தோள்களிலேயே சுமந்து செல்லப்படுகிறது. வாகனம் பயன்படுத்தப்படுவது இல்லை. சித்திராபௌர்ணமியன்று இவ்விழா நடைபெருகிறது.