Monthly Archives: December 2011

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், கும்பகோணம் வழி, வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம்.

+91 94863 03484 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார், கவர்தீஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தல விருட்சம் அரசு
தீர்த்தம் பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், அசுவத்தவனம்)
ஊர் ஆவூர் (கோவந்தகுடி)
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு கவர்தீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை, காமதேனுவின் கன்றான பட்டிஎன்ற பசு உணர்ந்தது. ஒரு இலிங்கம் அமைத்து, தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே அவரை நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக்கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் பசுபதீஸ்வரர்என்றும் அழைக்கப்பட்டார்.

வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். காமதேனு உலகிற்கு வந்த இடம் கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று. கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், நல்லூர்

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், நல்லூர், வலங்கைமான் வட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 93631 41676 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)
உற்சவர் கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்மன் கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி, கிரிசுந்தரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சப்தசாகரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநல்லூர்
ஊர் நல்லூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண, உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் வருந்துகிறார். “நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன்என்றார் சிவன். அதன்படி அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு இலிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூல இலிங்கத்தின் பின்புறம் காணலாம்.

பாண்டவர்களின் தாய் குந்திதேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். “ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும்என நாரதர் கூறினார்.