Monthly Archives: November 2011

அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்

அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2746 4325, 2746 3514, +91-93811 86389 (மாற்றங்களுக்குட்பட்டவை)

கச்சபேஸ்வரர் திருக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மருந்தீஸ்வரர் திருக்கோயில்காலை 7 – 9 மணி வரை மட்டும். பவுர்ணமியில் முழுநேர பூஜைகள் உண்டு.

மூலவர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர்
உற்சவர் அமிர்த தியாகராஜர்
அம்மன் அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள்
தல விருட்சம் கல்லால மரம், வேர்ப்பலா
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர், ஆலக்கோயில்
ஊர் திருக்கச்சூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

கச்சபேஸ்வரர் திருக்கோயில் :

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, “கச்சபேஸ்வரர்என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர்என்ற பெயரும் ஏற்பட்டது.

கச்சபேஸ்வரர்திருக்கோயில் அம்பாள் அஞ்சனாட்சி தெற்கு நோக்கியபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். “அஞ்சனம்என்றால் கண்என்று பொருள். இவள் மக்களை தன் கண்போல காப்பதால் இப்பெயர் பெற்றாளாம். அழகு மிகுந்தவளாக இருப்பதால் இவளுக்கு சுந்தரவல்லி என்றொரு பெயரும் உண்டு. இவளது சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. இங்கு பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பம் சிறப்பதாக நம்பிக்கை.

விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன் அவருக்காக இத்தலத்தில், தியாகராஜராக,”அஜபா நடனம்ஆடிக் காட்டியுள்ளார். எனவே, இத்தலம் உபயவிட தலங்களில்ஒன்றாகக் கருதப்படுகிறது. உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடப்பதும், அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சிறப்பு.

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2627 2430, 2627 2487 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீஸ்வரர்
அம்மன் பாலாம்பிகை
தல விருட்சம் வெள்வேல மரம்
தீர்த்தம் வேத தீர்த்தம், பாலி நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேற்காடு
ஊர் திருவேற்காடு
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில், தேவர் முதலியோர் இமயமலையை அடைந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன்,”நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம்என அருள்புரிந்து அனுப்பி வைத்தார். அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.

பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள், ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் எனப் பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார். ரேணுகை, இங்கேயே தங்கிக் கோயில் கொண்டாள். அதுவே, புகழ்பெற்ற,”கருமாரியம்மன் கோயில்என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டார். அதன்படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் திருவேற்காடுஎன அழைக்கப்படுகிறது.