Monthly Archives: November 2011

பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர்

அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4374 267 237

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரசுநாதர்
அம்மன் ஞானாம்பிகை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் முழையூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மகத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்ததார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு பரசுநாதர்என்ற பெயர் ஏற்பட்டது. இந்த தலத்தில் அம்பாள் ஞானாம்பிகையுடன், பரசுநாதர் கோயில் கொண்டுள்ளார். இங்கே ஒரு காலத்தில், மகாமகம் போல மிகப்பெரிய அளவில் திரிதியை விழா நடந்திருக்கிறது. வட மாநில பக்தர்களும் வந்தார்கள். அப்போது தங்கக்காசுகளால் சுவாமிக்கு காப்பிடப்படும். பிறகு இது படிப்படியாக குறைந்து விட்டது. சமீப காலமாக இந்தத்தலம் மீண்டும் புகழ் பெற்று வருகிறது.

பரஞ்சோதி ஈசுவரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில், தஞ்சாக்கூர்

அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில், தஞ்சாக்கூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 4574-205 100

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரஞ்சோதி ஈசுவரர்
அம்மன் ஞானாம்பிகை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆதிவில்வ வனம்
ஊர் தஞ்சாக்கூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

ஒரு முறை கைலாயத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் சிவனிடம் சென்று,”இறைவா. நாள் தோறும் நாங்கள் தங்களை பூசித்து வருகிறோம். இருந்தாலும் தங்களது எதார்த்த வடிவமாகிய பரஞ்சோதி தரிசனத்தை எங்களுக்கு காட்டியருள வேண்டும்என வேண்டினர். அதற்கு இறைவன்,”பூமியில் வில்வ வனத்தில் நான் அரூபமாக உள்ளேன். நீங்கள் அங்கு சென்று பூசித்தால் பரஞ்சோதி தரிசனம் கிடைக்கும்என்றார். அதன்படி அவர்கள் வில்வவனத்தை கண்டுபிடித்து, அங்கிருந்த வில்வமரத்தடியில் ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்ய குளமும் உண்டாக்கி சிவ பூஜை செய்தனர்.

சிவன் இவர்களது பூஜையை சோதனை செய்ய விரும்பி முதலில் ஒரு தேவ கன்னியையும், அதன் பின் மகாகாளி, வீரகாளியையும், கடைசியாகத் தானே வயதானவர் வேடத்தில் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தார். இதையெல்லாம் தேவர்கள் கண்டு கொள்ளாமல் பூஜையை தொடர்ந்தனர்.