Monthly Archives: November 2011

பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்.

+91- 413 – 269 9422, 94427 86351

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நல்லாத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருநாவுக்கரசர் பாடிய வைப்புத்தலம்.

பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

+91-4369-222 392, 94438 85316

மூலவர் பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன் பிரகன்நாயகி (பரியநாயகி)
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்துறைப்பூண்டி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

அரக்க குலத்தில், ஜல்லிகை என்ற பெண்மணியும் இப்பூமியில் பிறந்தாள். அரக்க குணங்களை விடுத்து, சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். கருணை உள்ளம் வாய்ந்த அப்பெண்ணுக்கு விருபாட்சன் என்ற இராட்சஷன் கணவனாக அமைந்தான். அவன் மனிதர்களையே உண்பவன். ஜல்லிகையோ, சாத்வீக உணவு உண்பவள். கணவனின் குணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் மறைந்த தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். அவனைப் பிடித்த விருபாட்சன், அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள்.