Monthly Archives: October 2011

ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர்

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 94438 33300

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)
அம்மன் சவுந்தர்யநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வைகை
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இடைக்காட்டூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இத்தலத்தில் நந்தர், யசோதை என்னும் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களது மகனாக பிறந்தவர் இடைக்காடர். இல்லறம், துறவறம் என இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் இவர், “இடைக்காடர்எனக் கூறுகின்றனர். அப்படி இருந்தும் எப்படி சித்தர் நிலைக்குச் சென்றார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், பெத்தநாயக்கன்பாளையம்

அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், பெத்தநாயக்கன்பாளையம், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 221 594

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆட்கொண்டீஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வசிஷ்டநதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பிருகன்நாயகிபுரி
ஊர் பெத்தநாயக்கன்பாளையம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சிவத்தலயாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். அதில் ஒன்றே இந்தக் கோயிலிலுள்ள லிங்கமாகும்.

இந்த லிங்கம் காலவெள்ளத்தில் புதைந்து விட்டது. பிற்காலத்தில் இப்பகுதியில் வசித்த சிவனடியாரின் கனவில் தோன்றிய சிவன், தான் வசிஷ்டநதியின் தென்கரையில் மண்ணில் புதையுண்டு இருப்பதாக கூறினார். அவர் லிங்கத்தை தோண்டி எடுத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தார்.

சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக சிவன், தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சிதந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் அமைந்தும் காட்சி தருகிறார்.