Monthly Archives: October 2011

அகத்தீஸ்வரர் கோயில், திருச்சுனை

அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில், திருச்சுனை, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.

காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
அம்மன் பாடகவள்ளி
தீர்த்தம் சுனை
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருச்சுனை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் நடந்தபோது, தேவர்களும், மகரிஷிகளும் அங்கு சென்றனர். இதனால், வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. எனவே, சிவன் அகத்தியரை தெற்கே பொதிகை மலை நோக்கி அனுப்பினார்.

தென்திசைக்கு கிளம்பிய அகத்தியர் தான் மட்டும் சிவன் திருமணத்தை காணாமல் செல்வதை எண்ணி வருந்தினார். எனவே சிவன், அகத்தியர் செல்லும் வழியில் எவ்விடத்தில் திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ, அவ்விடங்களில் தான் மணக்கோலத்தில் காட்சி தரும்படியான வரம் கொடுத்தார்.

அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களில் சிவனின் திருமணக்காட்சியை தரிசித்தார். அவர் இத்தலம் வழியாக வந்தபோது, இந்த குன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவர் சிவதிருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனை தரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது.

அகஸ்தீஸ்வரர் கோயில், எட்டியத்தளி

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில், எட்டியத்தளி, புதுக்கோட்டை மாவட்டம்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில், அறந்தாங்கியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள எட்டியத்தளியில் உள்ளது. அகஸ்திய முனிவர் வழிபட்ட தலம் இது. இவ்வாலயத்தில் சனி பகவானுக்கு ஒரு சந்நிதி கட்டப்பட்டது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மற்ற ஆலயத்தில் நவக்கிரகங்களில் சனி பகவானும் இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் இருப்பர். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து நவக்கிரகங்களை வழிபட்டால் சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம்.

அகஸ்திய முனிவருக்குக் களத்திரதோஷம் இருந்ததாகவும், அவர் இங்கு பூஜித்ததால் களத்திரதோஷம் நீங்கியதாகவும் கூறப்படுகிறது. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமியை வழிபட்டால், திருமணம் விரைவில் நடைபெறுகிறது.