Monthly Archives: October 2011

அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், அரசூர்

அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், அரசூர், தஞ்சாவூர் மாவட்டம்.

தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திற்கு முற்பட்ட காலத்துக் கோயிலாகக் கருதப்படுகிறது அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில். “சோழ வம்சாவழியில் கடைசியாக அரசாண்ட மன்னர்கள் புதுப்பித்த கோயில் இதுஎன்றும் சிலர் கூறுகிறார்கள். சோழ, பல்லவ, நாயக்க, மராட்டிய காலக் கட்டமைப்புடன் இவ்வாலயம் காட்சியளிக்கின்றது என்பது, இங்கே குறிப்பிடத் தக்க தகவல்.

சுவாமி, அம்மன் சந்நிதிகளின் விமானங்கள் திராவிடக் கட்டிடக் கலையின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. அர்த்த மண்டப விதானங்கள், காரை சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டு மராட்டிய மரபுடன் காட்சியளிக்கின்றன. முன் மண்டபம் மிகப் பெரிய அகலமான தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் பிரம்மாண்டமாக விளங்குகிறது. இது நாயக்கர் கால சாயலில் உள்ளது. கோயிலில் ஆங்காங்கே காணப்படும் சிறிய சிறிய வேலைப்பாடுகள் பல்லவ கட்டிடக் கலையை சார்ந்திருக்கின்றன.

அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை.

+91- 44 – 2617 2326, 93832 01591

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகஸ்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சுவர்ணாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அங்காரக தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வில்வாரண்யம்
ஊர் வில்லிவாக்கம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவன் திருமணம் நடந்தபோது, தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு வில்வலன், வாதாபி என்னும் சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்து விட்டார். இதனால் அவருக்கு பிரம்மகத்தி தோசம் உண்டானது. தோசம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூசைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூசைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அவரது தோசத்தையும் போக்கினார்.

காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார். அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்கநகைகள் அணிந்திருந்தாள். எனவே இவள், “சுவர்ணாம்பிகைஎனப்படுகிறாள். இவளது சன்னதி முகப்பில் மகாலட்சுமி, சரசுவதி சன்னதியும், எதிரே நவக்கிரக மண்டபமும் உள்ளது.