Category Archives: விருதுநகர்

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி– 626 119 விருதுநகர் மாவட்டம்.

+91- 98423 – 64059 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை காலை 8 – மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமி நாராயணர்
தாயார் லட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காரிசேரி
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர். ஒருசமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்மாவட்டம்.
***********************************************************************************

மூலவர் நல்லதங்காள்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வத்திராயிருப்பு
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வத்திராயிருப்பைச் சேர்ந்தவள் நல்ல தங்காள். இவளுக்கு நல்லதம்பி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. பண்பாடு மிக்க, பெரும் விவசாயக் குடும்பத்தில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்லதங்காளை, மதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பருக்கு திருமணம் செய்து வைத்தனர். நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்கு தாயானாள்.

இந்நிலையில் மதுரையைப் பஞ்சம் வாட்டியது. வறுமையைப் போக்க, தன் ஏழு பிள்ளைகளுடன் அண்ணன் நல்லதம்பியை நாடி வத்திராயிருப்புக்கு வந்தாள். அப்போது அண்ணன் வீட்டிலில்லை. அண்ணி அவளைக் கண்டு கொள்ளவில்லை.

பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தைகளையும் ஆதரிக்காமல், ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சென்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து, தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான்; அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான்; எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்து அவசர முடிவெடுத்து, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளையும் தூக்கி எறிந்து தானும் குதித்து மூழ்கினாள்.