Category Archives: விருதுநகர்

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்-626 130, விருதுநகர் மாவட்டம்.

+91- 94426 65443 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)
தாயார் செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி)
தீர்த்தம் பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி
ஆகமம் வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்தங்கல்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,”மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்என்று புகழ்பாடினர். பூமாதேவியின் தோழியரோ,”இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்என்று பாராட்டினர்.

அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர்

அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகுண்டமூர்த்தி
தாயார் பூரண, புஷ்கலா
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோட்டையூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் தர்மசாஸ்தாவாகவும், அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார்.

வைகுண்டமூர்த்தி சுவாமி கோயில் கி.பி. 1620ம் ஆண்டில் தற்போதைய சுந்தரபாண்டியம் பகுதியை ஆட்சி செய்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. இக்கோயிலில், அந்த மன்னனின் கலை நயத்தை வெளிப்படுத்தும் அழகிய சிற்ப ஓவியங்கள் இன்னும் அவனது புகழை பறைசாற்றுகின்றன.

வைகுண்ட வாசியான இந்த வைகுண்டமூர்த்தியார் அங்குள்ள ஈரேழு தேவலோகம், சுகபோக வைகுண்டவாசம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, பூலோக உயிர்களை காப்பதற்காக பூலோகத்தில் வந்து ஆங்காங்கே நிலை கொண்டுள்ளார்.

இவ்வாறு நிலை கொண்டுள்ள வைகுண்டமூர்த்தி, தென்னிந்திய கிராமத் தெய்வங்களில் கிராமத்தை காக்கும் முதன்மை காவல் தெய்வமாக விளங்கும் அய்யனாராகவும், தர்மசாஸ்தாவாகவும், கேரளாவில் சபரிமலையில் ஐயப்பனாகவும் பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் எழுந்தருளி பக்தர்களை காத்து வருகிறார்.

வைகுண்டமூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்ற இரு தேவியருடன் தம்பதி சகிதமாக, அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார்.