Category Archives: திருவள்ளூர்

அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர்

அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர், சென்னை– 600 004.
****************************************************************************************

+91- 44 – 2498 1893, 2498 6583 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முண்டக கண்ணியம்மன்

தல விருட்சம்: – ஆலமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மயிலாபுரி

ஊர்: – மயிலாப்பூர்

மாவட்டம்: – சென்னை

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் இத்தலத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள், சுயம்பு உருவாக எழுந்தருளினாள். பக்தர்கள் ஆரம்பத்தில் அம்பாளுக்கு ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.

பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஆனாலும் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் கருவறை மட்டும், தற்போதும் குடிசையிலேயே இருக்கிறது.

அம்பாள், எளிமையை உணர்த்துவதற்காக ஓலைக்குடிசையின் கீழிருந்து அருளுவதாக சொல்கிறார்கள். இத்தலத்து அம்பிகையின் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு போன்ற வடிவில் காட்சியளிக்கிறது. எனவே இவள், “முண்டக கண்ணியம்மன்என்று அழைக்கப்படுகிறாள்.

முண்டகம் என்றால் தாமரைஎன்று பொருள். சுயம்புவின் மத்தியில் அம்பிகையின் பிரதான ஆயுதமான சூலம் இருப்பது சிறப்பு.

அருள்மிகு கும்மாளம்மன் கோயில், தண்டையார்பேட்டை

அருள்மிகு கும்மாளம்மன் கோயில், சென்னை தண்டையார்பேட்டை
*****************************************************************************
காலரா மருத்துவமனை அருகில்

காலை 6 முதல் 10 மணி வரையிலும்; மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கும்மாளம்மனை மனமுருகி வணங்குபவர்கள், தங்கள் வாழ்வில் துன்பங்கள் விலகி, விரைவில் வித்தியாசத்தை உணர்வது நிச்சயம்.

அன்னை பராசக்தியின் ஓர் அம்சம்தான் கும்மாளம்மன். இந்த அம்மனே வடக்கில் சந்தோஷிமாதா என்று அழைக்கப்படுகிறாள்.

பூஜைகள், யாகங்களின் போது, தெய்வங்களை கலசத்தில் இருத்தியே வழிபடுவது ஆகமவிதி. அந்த முறைப்படியே சந்தோஷிமாதா வழிபாடும் நடத்தப்படுகிறது. அப்படிக் கும்பத்தில் ஆவாகனம் செய்யப்படுபவள் என்பதால் கும்பத்தை ஆளும் அம்மன் என்ற பொருளில் கும்பாளம்மன் என்றழைக்கப்பட்டவளே, இன்று மருவி, கும்மாளம்மன் என்ற திருப்பெயரோடு அழைக்கப்படுகிறாள்.

சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்காலத்தில் தென்னந்தோப்புகள் நிறைந்த இப்பகுதியில், கடற்கரையை நோக்கி எழுப்பப்பட்ட இவ்வாலயத்தில், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பல சன்னதிகள் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிவருகிறது.