Category Archives: திருவள்ளூர்

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077 (சென்னை), திருவள்ளூர் மாவட்டம்.
*************************************************************************************************

+91-44-2680 0430, 2680 0487, 2680 1686 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்: – கருவேல மரம்

தீர்த்தம்: – வேலாயுத தீர்த்தம்

ஆகமம் : – காமீகம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வேலங்காடு

ஊர்: – திருவேற்காடு

மாவட்டம்: – திருவள்ளூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் நாகப் புற்று ஒன்று இருந்தது. இதனை மக்கள் அம்பிகையாகப் பாவித்து வணங்கி வந்தனர்.

ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோயில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள். பின்பு இங்கு கோயில் கட்டப்பட்டது.ம்பிகை தானாகத் தோன்றியதால் இவளுக்கு, “கருவில் இல்லாத கருமாரி“ என்ற பெயரும் உண்டு.

முன்பு இத்தலத்தில் புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும்போது கோயிலைவிட்டு வெளியேறியது. இந்த நாகம் ராசகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோடம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்-600 090. சென்னை.

+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: அட்டலட்சுமி, மகாலட்சுமி,திருமால்

தாயார்: ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விசயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி

தீர்த்தம்: சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)

பழமை : 25 வருடங்களுக்கு முன்

ஊர் : பெசன்ட் நகர்

மாவட்டம் : சென்னை

மாநிலம் : தமிழ்நாடு

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது.

இந்த கடற்கரைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.