Category Archives: திருவள்ளூர்

அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில், மணலி

அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில், மணலி, வட சென்னை.

காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும்; மாலை 5.30 முதல் 8.30 வரை திறந்திருக்கும்.

திரு என்றால் செல்வம் என்று பொருள். தங்களது பெயரிலேயே திருவைக் கொண்டுள்ள இறைவனும், இறைவியும்; தங்களை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் திருவுக்குக் குறைவராமல் பார்த்துக்கொள்ளும் தலம், சென்னை மணலியில் அமைந்துள்ளது.

பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்

அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001 திருவள்ளூர் மாவட்டம்.

+91-44-2766 0378, 97894 19330 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

thiruevvulur-moolavar_veera_raagavar_swamy_koil460

மூலவர் எவ்வுள்கிடந்தான் (வீரராகவப் பெருமாள்)
உற்சவர் வைத்திய வீரராகவர்
தாயார் கனகவல்லி
தீர்த்தம் ஹிருதாபதணி
ஆகமம் பாஞ்சராத்திரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் எவ்வுளூர்
ஊர் திருவள்ளூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார். வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார். கிழவரும் புசித்துப் பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் ஒரு வருடம் திரும்பவும் தபம் செய்தார். ஒரு வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார். பிறகு படுத்துறங்க அந்த கிழவர் எவ்வுள்என்று வினவ, முனிவரும் தன் இடத்தையே காட்டி இவ்விடம் படுத்துக் கொள்ளவும்என்றார்.