Category Archives: திருநெல்வேலி

மத்தியஸ்த நாதர் கோயில், தாருகாபுரம்

அருள்மிகு மத்தியஸ்த நாதர் கோயில், தாருகாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

இவ்வுலகம் பஞ்ச பூதங்களாலானது. இதில் எண்ணற்ற உயிர்களையும் படைத்த சிவபெருமான், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிந்து இயக்கி வருகிறார். உயிர்களின் வினைகளை வேரொடு அழிக்க இலிங்க வடிவில் பல தலங்களிலும் கோவில் கொண்டுள்ளார். அத்தகைய தலங்களில் ஒன்று தாருகாபுரம் மத்தியஸ்த நாதர் ஆலயம். மக்கள் தங்களுக்குள் எவ்விதப் பிணக்கும் இன்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் உண்மையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது இவ்வாலயம்.


முற்காலத்தில் மாஞ்சோலைகளும் பூஞ்சோலைகளும் நிறைந்து, மனதைக் குளிர வைக்கும் இந்தப் பகுதி தாருகாவனம் எனப்பட்டது. மன்னர்களும் தவயோகிகளும் மக்களும் இளைப்பாறிச் செல்லும் பகுதியாக இது விளங்கியது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையில் இருந்தது. அதனால் இதைக் கைப்பற்ற மூவேந்தர்களுக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டு வந்தது. தங்கள் வசம் இருக்கும் பகுதியை மற்றவர்கள் பறித்துக் கொள்வார்களோ என்ற அச்சம் இருந்ததால், எந்த நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டியதாயிற்று. மனதுக்குள் பிணக்கிருந்தாலும் மேலுக்கு நட்பு பாராட்டிக் காலத்தைக் கடத்தி வந்தார்கள்.

நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூர்

அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூர், திருநெல்வேலி மாவட்டம்.

+91 – 4634 – 287244

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாறும்பூநாதர்
உற்சவர் பூநாதர்
அம்மன் கோமதியம்பாள்
தல விருட்சம் மருதம்
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்புடைமருதூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு சமயம் சிவனிடம் தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டத்தை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப்பெற்றனர்.

பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இங்கு வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றினை கண்ட மன்னன் அதனை தனது அம்பினால் வீழ்த்தினார்.