Category Archives: திருநெல்வேலி

காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 253 921, +91- 98423 31372

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசிநாதசுவாமி (காசிபநாதர்), எரித்தாட்கொண்டார்
அம்மன் மரகதாம்பிகை
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அம்பாள்சமுத்திரம்
ஊர் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் காசிப முனிவர் சிவனை வேண்டி, ஒரு யாகம் நடத்தினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். அவரிடம் காசிபர், தனக்கு பூஜை செய்ய இலிங்க வடிவம் வேண்டுமென்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், அப்படியே சிவலிங்கமாக மாறினார். அந்த இலிங்கத்தை காசிபர் இங்கு பிரதிஷ்டை செய்து, வழிபட்டார். காசிபரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் சுவாமி, “காசிபநாதர்என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பெயர், “காசிநாதர்என மருவியது.

அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி

அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம்

+91- 4634 – 265 111, +91- 94422 26511.

காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அம்மநாதர்(அம்மையப்பர்)
அம்மன் ஆவுடைநாயகி(கோமதியம்பாள்)
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சேரன்மகாதேவி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் இலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.