Category Archives: ஈரோடு

அருள்மிகு கருப்பண்ணசாமி கோயில், பொய்யேரிக்கரை

அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், பொய்யேரிக்கரை, ஈரோடு மாவட்டம்.

+91-424-221 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருப்பண்ணசாமி
தல விருட்சம்: வெள்ளை வேலாமரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பொய்யேரிக்கரை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது.

மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர். ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம், கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், கோபி

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், கோபி, ஈரோடு மாவட்டம்.

+91-4285-321854, 94427 09596

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோபி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

கோபி ஐயப்பன் கோயிலில் ஈஸ்வரனும், முருகனும் எதிரெதிரே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கிருக்கும் மஞ்சள் மாதா சன்னதி பிரபலமானது. இந்த கோயிலில் வாய் பேச முடியாதவர்களுக்காக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, அவர்கள் நலனுக்காக வேண்டப்படுகிறது. கோயிலினுள் நுழைந்ததும் இடது, வலது பக்கங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரு சன்னதிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து ஐயப்பசுவாமி மண்டபம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுமார் மூன்றாயிரம் பக்தர்களுக்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு வழிநடத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இருமுடிகட்டும் மண்டபத்திற்கு அருகே நாகராஜர் சன்னதியும், கோயிலின் மையப்பகுதியில் ஐயப்பன் சன்னதியும், அதனருகே விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத பரமேஸ்வரர் சன்னதியும், இதற்கு நேர் எதிரே பாலமுருகன் சன்னதியும், அருகில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. பரமேஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பாலமுருகன் ஈஸ்வரனின் நேரடி அருளை பெற்று பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை வழங்கி வருகிறார்.