Category Archives: ஈரோடு

அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர்

அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர், ஈரோடு மாவட்டம்.

+91-424-227 5717 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

லட்சுமி நாராயணர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

புதூர்

மாவட்டம்

ஈரோடு

மாநிலம்

தமிழ்நாடு

பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவைக் கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள். தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததை சிறப்பிக்கும் பொருட்டு, அப்பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், விஷ்ணு அவளைத் தன் இடது தொடை மீது அமர்த்தி, தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக காட்சி அளித்தார். இக்கோயில் 16ம் நூற்றாண்டில் மைசூர் கர்த்தார் இன மன்னர்களால் கட்டப்பட்டது.

இக்கோயிலில் உள்ள காளிங்கன் என்ற ஐந்து தலை பாம்பு சிலை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி, பாம்பு மீது கிருஷ்ணன் நாட்டியம் ஆடுவது போல் சிலைவடிக்கப் பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த சிலை இன்னும் புதிதாக காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. எதிரிகளின் தொல்லைக்கு ஆளானவர்கள் இந்த காளிங்க நர்ந்தன சிலையை வழிபட்டால் தொல்லையிலிருந்து நீங்கலாம்.

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர், ஈரோடு மாவட்டம்.

+91- 4285 – 222 010, 222 080 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆதிநாராயணர்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம்

கிணற்றுநீர்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பாரியூர்

மாவட்டம்

ஈரோடு

மாநிலம்

தமிழ்நாடு

விவசாயத்தில் செழித்துத் திகழும் இப்பகுதியில், முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் நீங்கியது. பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.

முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர். சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் செய்யலாம்.