Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுக்(ஷ்)கோடி

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுக்(ஷ்)கோடி, ராமேசுவரம் – 623 526,
************************************************************************************************
ராமநாதபுரம் மாவட்டம்.
************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நம்புநாயகி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தனுக்(ஷ்)கோடி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்தார். தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தட்சிண காளியாகப் பெயர் பெற்றார். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்தார்கள். அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததார்கள்.

இது தகவல்.

இரண்டு முனிவர்களும் கற்பகோடி காலம் வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு இப்பகுதியிலேயே சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

ராமேசுவரம் சிங்களர்களின் பிடியில் இருந்தபோது சூலோதரன் என்ற சிங்கள மன்னன் இந்த தீவின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான மண் குன்றில் கோட்டை ஒன்றை அமைத்து ஆட்சிசெய்து வந்தான். அந்த மன்னனுக்கு தீராத நோய் கண்டு எந்த மருத்துவமும் பயனளிக்காத நிலையில் தட்சிண காளியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தான்.

உடன் இருந்த சகோதரர்கள், மற்றும் அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் தட்சிண காளியே கதி என்று முடிவு செய்த சூலோதரன், காளிஅம்மன் வீற்றிருந்த குடிசையின் அருகிலேயே ஒரு சிறிய குடிலை அமைத்து அங்கேயே தங்கினான்.

கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நன்னீர் தடாகங்களில் நீராடிக் காளியை வணங்கிவர முற்றிலும் நோய் நீங்கி நலமடைந்தான். நம்பி வந்து வணங்கியதால் துயர்துடைத்த தட்சிண காளி அம்மனுக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை அமைத்த சூலோதரன், தன்னைப்போல் தீராத பிணிகளுடன் வரும் பக்தர்கள் தங்கி நலமடைந்து செல்லப் பல வசதிகளையும் செய்து கொடுத்தான். காளியைக் கேலி செய்தவர்கள் பெரும் நோய்க்கு ஆளானார்கள். எனவே,”நம்பு நாயகியை வணங்கினால் வம்பில்லைஎன்ற சொலவடை உருவாயிற்று.

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்மாவட்டம்.
***********************************************************************************

மூலவர் நல்லதங்காள்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வத்திராயிருப்பு
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வத்திராயிருப்பைச் சேர்ந்தவள் நல்ல தங்காள். இவளுக்கு நல்லதம்பி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. பண்பாடு மிக்க, பெரும் விவசாயக் குடும்பத்தில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்லதங்காளை, மதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பருக்கு திருமணம் செய்து வைத்தனர். நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்கு தாயானாள்.

இந்நிலையில் மதுரையைப் பஞ்சம் வாட்டியது. வறுமையைப் போக்க, தன் ஏழு பிள்ளைகளுடன் அண்ணன் நல்லதம்பியை நாடி வத்திராயிருப்புக்கு வந்தாள். அப்போது அண்ணன் வீட்டிலில்லை. அண்ணி அவளைக் கண்டு கொள்ளவில்லை.

பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தைகளையும் ஆதரிக்காமல், ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சென்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து, தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான்; அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான்; எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்து அவசர முடிவெடுத்து, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளையும் தூக்கி எறிந்து தானும் குதித்து மூழ்கினாள்.