Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கீழ்கொடுங்கலூர், வந்தவாசி

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.
**********************************************************************************************************

+91- 4183-242 406 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கீழ்கொடுங்கலூர்

ஊர்: – வந்தவாசி

மாவட்டம்: – திருவண்ணாமலை

மாநிலம்: – தமிழ்நாடு

சமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள். கடைசிமகன் பரசுராமன். பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று. கற்பில் சிறந்தவளான ரேணுகாதேவி பச்சைமண்ணால் செய்யப்பட்ட குடத்தில் தண்ணீர் ஏந்தி தனது ஆசிரமத்திற்கு கொண்டு வருவாள். அவளது கற்பின் சக்தியால் இது முடிந்தது.

ஒருமுறை வானத்தில் கந்தர்வன் ஒருவன் சென்றுகொண்டிருந்தான். அவனது நிழல் ஆற்றில் தெரிந்தது. அதைப்பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவளது மனம் சலனப்பட்டது. ஆயினும் மனதில் விரசம் எதுவும் இல்லாமல்,”இப்படியும் ஆணழகர்கள் உலகத்தில் இருக்கிறார்களா?” என்று மட்டுமே எண்ணினாள். அந்த மாத்திரத்திலேயே அவள் கையிலிருந்த குடம் உடைந்துவிட்டது.

அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி

அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
***************************************************************************

செட்டிநாட்டுச் சீமையின் முக்கிய நகரான காரைக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள முத்துப்பட்டினம் மீனாட்சிபுரத்தில் கோயில் அமைந்துள்ளது.உள்ளது முத்துமாரியம்மன் கோயில்.

1956ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் லலிதா என்ற 8வயது சிறுமி காரைக்குடி அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு உடல் முழுவதும் அம்மையுடன் வந்தாள். தனியாக வந்த அந்த சிறுமியைத் தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார் சந்தித்தார். சிலநாளில் சிறுமியின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகளெல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிலநாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலபேர் சிறுமியை கிண்டலடித்தனர். அதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, “உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா“ என்றாள். அவரோ! சிரித்தபடியே,”என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது“ எனக் கிண்டலாகப் பதில் கூறினார்.