Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம்

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.
*************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தாரம்மன், ஞானமூர்த்தி

அம்மன்: – முத்தாரம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – வங்கக்கடல்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வீரைவளநாடு

ஊர்: – குலசேகரன்பட்டினம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

சுயம்புவாகத் தோன்றிய அம்பாள் வடிவங்களே வழிபாடு செய்யப்பட்டு வந்தன. ‌

மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவர் கனவில் அம்பாள் தோன்றி,”எனக்குச் சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் ‌கொடுத்துனுப்புஎன்று கூற, ‌அதே போல அர்ச்சகர் கனவிலும் தோன்றி,”ஆசாரி தரும் சிலையை சுயம்பு ‌அருகே வைத்து வழிபடுஎன்று கூறி மறைந்தாள். அதன்படியே மக்களால் செய்யப்பட்டது.

அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி

அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி – 623 707. ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4564 – 229 640, +91- 94434 05585 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தால பரமேசுவரியம்மன்

உற்சவர்: – முத்தாலம்மன்

தல விருட்சம்: – கடம்ப மரம்

தீர்த்தம்: – வைகை

ஆகமம்: – சிவாகமம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பரமக்குடி

மாவட்டம்: – ராமநாதபுரம்

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி. அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான்.

அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன.

சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப்பெண்ணை பாராட்டிப் பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளைக் கட்டாயப்படுத்தினான்.