Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு முத்துநாயகி அம்மன் திருக்கோயில், பரவை

அருள்மிகு முத்துநாயகி அம்மன் திருக்கோயில், பரவை, மதுரை.
************************************************************************

+91 99949 12047 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துநாயகியம்மன்

தல விருட்சம்: – வேப்பமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – பரவை

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன், பரவை பகுதி முழுவதும் புஞ்சை நிலங்களாக இருந்தது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தனர். ஒரு சமயம் விவசாயிகள் உழுது கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் ஏர் ஆணி தட்டியது. தொடர்ந்து முயற்சிக்க ஏதோ ஒரு உலோகச் சத்தம் கேட்டது. விவசாயிகள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். பூமியில் பதிந்த ஏரை தூக்கினர்., பூமிக்குள் முத்துமுத்தாக சிகப்பு நிறத்தில் ஏதோ கொப்பளித்தது. இந்த அற்புதத்தை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியாகி, மற்ற விவசாயிகளை அழைத்தார்கள். அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அக்கட்சியைக் கண்டு வியந்தனர். அனைவரும் இந்த இடத்தில் அதிசய சக்தி இருப்பதாக கருதினர். மேலும், அவ்விடத்தில் தோண்டிப் பார்த்தபோது, உள்ளிருந்து ஒரு சிலை வெளிப் பட்டது. ஆதிபராசக்தியின் திருவுருவமான அழகான அம்மன் சிலையைக் கண்டு மக்கள் பக்தி பரவசம் கொண்டனர். பக்திப்பெருக்குடன் தீபாராதனை செய்து வழிபட்டனர். இவளுக்கு முத்து நாயகியம்மன் என்று பெயர் சூட்டப்பட்டது . அங்கு வசித்த பட்டையக்காரர் என்பவர் கனவில் அம்மன் தோன்றி,”நீங்கள் வசிக்க ஒரு குடில் இருப்பது போல், எனக்கும் ஒரு குடில் வேண்டாமா?” எனக் கேட்டாள். இந்த விசயத்தை கிராம கூட்டத்தில் அவர் கூற, பொதுமக்கள் கோயில் கட்டினர்.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம்

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம் – 630 709 சிவகங்கை மாவட்டம்.
********************************************************************************************************

+91 4564 206 614 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துமாரியம்மன்

உற்சவர்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – மாரியம்மன் தெப்பம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – தாய்மங்கலம்

ஊர்: – தாயமங்கலம்

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த வணிகர் ஒருவர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. மீனாட்சியம்மனிடம் தனது குறையைத் தீர்த்து அருளும்படி வேண்டிக்கொள்வார். ஒருசமயம் மதுரையில் இருந்து ஊர் திரும்பியபோது, வழியில் ஒரு சிறுமி யாருமில்லாமல் தனியே நின்று அழுது கொண்டிருந்தாள். அவளைப் பரிவுடன் விசாரித்தவருக்கு, குழந்தை இல்லாத தனக்கு மீனாட்சியே குழந்தையாக வந்ததாக எண்ணி மகிழ்ந்தார். குழந்தையைத் தன்னுடன் அழைத்து வந்தார். இங்குள்ள குளக்கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு, நீராடச் சென்று திரும்பினார். அப்போது, குழந்தையைக் காணவில்லை. இதனால், மனம் வருந்தியவர் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் நடந்ததைக் கூறினார். இருவரும் தங்களுக்கு கிடைத்த குழந்தையும் கிடைக்கவில்லையே என எண்ணி உறங்கச் சென்றனர். அன்றிரவில் வணிகரின் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும், கற்றாழைக் காட்டில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு தனது பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் மண்ணை பிடித்து வைத்து, கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் இவளுக்கு சிலை வடித்து கோயில் பெரியளவில் கட்டப்பட்டது. அம்பிகைக்கு முத்து மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பெற்றது.